கைபர் பக்துன்வாவில் தீவிரவாதத் தாக்குதல்கள்
கைபர் பக்துன்வா மாகாணத்தில் தீவிரவாத தாக்குதல்கள், பாக்கித்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் தெக்ரிக் -இ-தாலிபான், அல் காயிதா, லஷ்கர்-இ-இஸ்லாம்[4] மற்றும் தெகரிக்கு-இ-நபாஸ்-இ- சரியத்-இ-முகம்மதி (Tehreek-e-Nafaz-e-Shariat-e-Mohammadi (TNSM) போன்ற இசுலாமிய தீவிரவாத அமைப்பினர், பாகிஸ்தான் அரசு மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக நடத்தும் ஆயுதத் தாக்குதல்களைக் குறிக்கிறது. 2004ஆம் ஆண்டிலிருந்து அல் காயிதா தீவிரவாதிகளுக்கு எதிராக பாக்கித்தான் இராணுவம் தாக்குதல்கள் நடத்தத் தொடங்கியது முதல் இக்கிளர்ச்சிகள் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடந்து வருகிறது.. ஆப்கானத்திலிருந்து கைபர் பக்துன்வா மாகாணததிற்கு எதிராக வரும் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த, 2017ல் பாகிஸ்தான் தலைமைப் படைத்தலைவர் பாஜ்வா ஆப்கானித்தான்-பாகிஸ்தான் இடையே 2600 கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் கம்பி வேலி அமைத்து, 1000 காவல் கோபுரங்களை நிறுவினார். மேலும் கைபர் பக்துவன்வா-ஆப்கானித்தான் எல்லையை காவல் காக்க 67 எல்லைக் காவல் படைப்பிரிவுகள் நிறுவப்பட்டது. பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான்கள், 16 டிசம்பர் 2014 அன்று பெசாவர் இராணுவப் பள்ளிக்கூடம் மீதான தாக்குதலில் 132 மாணவ மாணவிகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டனர்.[5].[6]. 2021 காபூல் வீழ்ச்சிக்குப் பின் பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான்களின் கை ஓங்கியது. 2022ம் ஆண்டின் முடிவில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 13 தற்கொலை படைத் தாக்குதல்கள் நடைபெற்றது. இதன் பின் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்குப் பின் சூன 2022ல் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் நவம்பர் 2022ல் தெக்ரிக் -இ-தாலிபான் அமைப்பானது சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி, கைபர் பக்துன்வா மாகாணம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்களை அதிகப்படுத்தியது. 7 ஏப்ரல் 2023 அன்று பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் செரீப் தலைமையிலான தேசியப் பாதுகாப்பு குழு எடுத்த முடிவின்படி, நாடு முழுவதும் அரசு மற்றும் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களை அடக்க இராணுவ நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. 12 டிசம்பர் 2023 அன்று பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்த 23 பாகிஸ்தான் இராணுவ வீரர்களை இக்கிளர்ச்சிக் குழுவினர் கொன்றனர்.[7] 2023 பெசாவர் பள்ளிவாசல் தற்கொலைப்படை குண்டு வெடிப்பில் 95 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 223 பேர் காயம் அடைந்தனர். இதற்கு பாகிஸ்தான் தலிபான்கள் பெறுப்பேற்றது.[8] [9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia