கோதமங்கலம்
கோதமங்கலம் (Kothamangalam) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகராட்சியாகும். இந்த நகரம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது. நெடுஞ்சாலை எண் -85 எர்ணாகுளம் - மதுரை - இராமேசுவரம் இதன் வழியாக செல்கிறது. இது இடுக்கி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இந்த நகரம் ஒரு வட்டத்தின் தலைமையகமாகவும் அதே பெயரில் நகராட்சியாகவும் செயல்படுகிறது . நிலவியல்கோதமங்கலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது 'மலைச்சிகரங்களின் நுழைவாயில்' என்று அழைக்கப்படுகிறது. கேரளாவின் புவியியல் பகுதிகளின் பிரிவின் படி, அதாவது உயர் நிலங்கள், நடுப்பகுதிகள் மற்றும் குறைந்த நிலங்களின் அமைப்பில், இது ஒரு மத்திய நிலப் பகுதியில் உள்ளது. [1] பொது நிலப்பரப்பு மலைப்பாங்காக உள்ளது. மூணார் மலை வாழிடம் இங்கிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கேரளாவின் மிகப்பெரிய நதியான பெரியாறு இதன் வழியாக பாய்கிறது. நீர் மின் ஆற்றல் உற்பத்தி மற்றும் நீர்ப்பாசன நோக்கங்களுக்காக இடமலயாறு, கீழ் பெரியாறு (நேரியமங்கலம் அருகே) மற்றும் பூததங்கெட்டு ஆகியவற்றில் பெரியார் முழுவதும் கட்டப்பட்ட அணைகள் கொத்தமங்கலம் பகுதியில் அமைந்துள்ளன. தற்போதைய கொத்தமங்கலம் பகுதி வரலாற்று ரீதியாக 'மலகாச்சிரா' என்று அழைக்கப்பட்டது. நகரத்தின் ஊடாகப் பாயும் கோத்தமங்கலம் ஆறு என்ற சிறிய ஆறு காளியாறு மற்றும் தொடுபுழா ஆற்றுடன் சேர்ந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நதியாக இருக்கும் மூவாற்றுப்புழை ஆற்றை உருவாக்குகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia