கோபால்கஞ்ச்
கோபால்கஞ்ச் (Gopalganj), வட இந்தியாவின் பீகார் மாநிலத்தின் வடமேற்கில் அமைந்த கோபால்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான பட்னாவிற்கு வடமேற்கே 141 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டத்திற்கு வடக்கில் முசாபர்பூர், கிழக்கு சம்பரான், மேற்கு சம்பரான் மாவட்டங்களும், தெற்கில் சரண் மற்றும் சிவான் மாவட்டங்களும், மேற்கில் உத்தரப் பிரதேசத்தின் குசிநகர் மாவட்டமும் உள்ளது. இந்நகரத்தில் கண்டகி ஆறு பாய்கிறது. மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 28 வார்டுகளும், 10,796 குடியிருப்புகளும் கொண்ட கோபால்கஞ்ச் நகரத்தின் மக்கள் தொகை 67,339 ஆகும். அதில் ஆண்கள் 34,603 மற்றும் 32,736 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 80.66 % ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 10.19 % மற்றும் 0.31 % ஆக உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 79.91%, இசுலாமியர் 19.67% மற்றும் பிற சமயத்தினர் 0.43% ஆக உள்ளனர்.[1] போக்குவரத்துநெடுஞ்சாலைதேசிய நெடுஞ்சாலை 27 (இந்தியா) கோபால்கஞ்ச் நகரம் வழியாகச் செல்கிறது. கோபால்கஞ்ச் தொடருந்து நிலையம் இரண்டு நடைமேடைகள் கொண்டது. [2]இந்நிலையம் பட்னா, கோரக்பூர், சாப்ரா நகரம், காஸ்கஞ்ச் போன்ற நகரங்களுடன் இருப்புப்பாதை மூலம் இணைக்கிறது. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia