கௌர் பிராமணர்கள் (Gaur Brahmins) (மேலும் கோர், கௌர், கவுட் அல்லது கௌடா என்றும் உச்சரிக்கப்படுகிறார்கள்) இந்தியாவில் உள்ள பிராமணர்களின் சமூகமாகும். விந்திய மலைத்தொடருக்கு வடக்கே வசிக்கும் ஐந்து பஞ்ச கௌடர் பிராமண சமூகங்களில் இவர்களும் ஒருவர்.[1][2]
இவர்கள், தில்லியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். இது ஜாட்டுகள் மற்றும் குஜ்ஜர்களின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாகும். இவர்கள் பிராந்தியத்தின் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துகின்றனர்.[4][5]
இராணுவம்
முதலாம் உலகப் போரின் போது, இவர்கள் பிரித்தானிய இந்திய இராணுவத்தின் படைப்பிரிவுகள் மற்றும் நிறுவனங்களுக்கு, குறிப்பாக 1 வது பிராமணர்கள் மற்றும் 3 வது பிராமணர்கள் அணியில் நியமிக்கப்பட்டனர்.[6]
சமூக அந்தஸ்து
கௌட பிராமணர்கள் வசிக்கும் இடங்களில், இவர்கள் பிராமணர்களில் மிக உயர்ந்த வகுப்பினராகக் கருதப்படுகிறார்கள்.[7]
குறிப்பிடத்தக்க நபர்கள்
பாய் அல்மாஸ்ட்-16ஆம் நூற்றாண்டின் மதத் தலைவர்.[8][9]
பாய் பாலு ஹஸ்னா-16ஆம் நூற்றாண்டின் மதத் தலைவர் [10]
குஷால் சிங் ஜமாதர்-19ஆம் நூற்றாண்டின் இராணுவ மற்றும் நிர்வாக அதிகாரி [11][12]
தேஜ் சிங்-19ஆம் நூற்றாண்டின் இராணுவ மற்றும் அரசியல் தலைவர்.[13]
ஜவஹர்லால் நேரு - இந்தியாவின் முதல் பிரதமர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த இந்திய போராட்டத்தில் பங்கேற்றவர். இந்தியாவின் தலை சிறந்த அரசியல் தலைவர் ஆகும்.
இந்திரா காந்தி - இந்தியாவின் நான்காவது பிரதமர் மற்றும் நேருவின் மகள் இந்தியாவின் முதல் பெண் பிரதமரும் ஆவார்.
↑Excelsior, Daily (24 December 2014). "A Staunch Nationalist". Jammu Kashmir Latest News | Tourism | Breaking News J&K (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 23 April 2023.