க. குமாரவேலு
கருப்பையா குமாரவேலு (Karuppiah Kumaravelu) (பிறப்பு 3 செப்டம்பர் 1921) என்பவர் இலங்கையைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார்.[1] குமாரவேலு 1947 ஆகஸ்ட் 23 மற்றும் 20 செப்டம்பர் 1947க்கு இடையில் நடைபெற்ற முதலாவது இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கொட்டகலைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்டு மொத்த வாக்குகளில் 53.5% பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரை விட 3,543 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிபெற்றார். 1947-ல் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழுபேரில், குமாரவேலுவின் மருமகன் செளமியமூர்த்தி தொண்டமானும் ஒருவர்.[2] இவர் இலங்கை இந்தியக் காங்கிரசு நிறுவனர்களில் ஒருவர் ஆவார்.[3] 1948இல் நாடாளுமன்றம் இலங்கை குடியுரிமைச் சட்டம்-1948 நிறைவேற்றியது. பின்னர் 1949இல் இலங்கை (நாடாளுமன்றத் தேர்தல்) திருத்தச் சட்டம் எண் 48ஐ நிறைவேற்றியது. இதன் மூலம் இந்தியக் குடிமக்கள் நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியவில்லை. இதன் விளைவாக குமாரவேலுவால் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியில் போட்டியிட முடியவில்லை.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia