க. வே. நடராசா
க. வே. நடராசா (Kanthapillai Velupillai Nadarajah, 6 சூலை 1905 – அக்டோபர் 2000) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்புநடராசா 1905 சூலை 6 இல்,[1] கே. வேலுப்பிள்ளை, ஆச்சிக்குட்டி ஆகியோருக்குப் பிறந்தார்.[1] யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, பரமேசுவரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.[1] பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார்.[1] பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் கற்று வழக்கறிஞரானார். இவர் பி. எஸ். இளையதம்பி என்பவரின் மகள் ஞானமணியைத் திருமணம் புரிந்தார்.[1] பணிநடராசா இலங்கையின் மலையகத்தில் பதுளையில் 1930 இல் சட்டத் தொழிலை ஆரம்பித்தார்.[1] ஊவா மாகாணத்தில் 54 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[1] அரசியல் வாழ்க்கைநடராசா பதுளை நகரசபை உறுப்பினராக 10 ஆண்டுகள் இருந்தார்.[1] 1947 நாடாளுமன்றத் தேர்தலில் பண்டாரவளை தேர்தல் தொகுதியில் சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2][3] நடராசா பதுளை சைவ பரிபாலன சங்கத்தின் தலைவராகவும், பதுளை கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் அறங்காவலராகவும் இருந்து சேவையாற்றினார்.[1] ஊவா மாகாணத்தின் முதலாவது தமிழ்ப் பாடசாலையை நிறுவினார். பதுளை சரசுவதி மகா வித்தியாலயத்தின் முகாமையாளராக 30 ஆண்டுகள் இருந்துள்ளார்.[1] பிற்கால வாழ்க்கை1983-இல் தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை வன்முறைகளின் போது பிங்காரவையில் இருந்த இவரது வீடு வன்முறையாளர்களினால் தீக்கிரையாக்கப்பட்டது.[3] பதுளையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. சி. டி. கொத்தலாவலையின் உதவியுடன் கொழும்பு சென்றார்.[3] பின்னர் அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து வாசிங்டனில் வாழ்ந்து வந்தார்.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia