சஞ்சய் இராசரத்தினம்
சஞ்சய் இராசரத்தினம் (Sanjay Rajaratnam) இலங்கை வழக்கறிஞர் ஆவார். இவர் தற்போது இலங்கையின் சட்டமா அதிபராகப் பத்வியிலுள்ளார்.[1][2][3][4][5] முன்னதாக இவர் 2019 அக்டோபர் முதல் 2021 மே வரை பதில் மன்றாடியார் நாயகமாகப் பதவி வகித்திருந்தார். வாழ்க்கைக் குறிப்புசஞ்சய் இராசரத்தினம் மூத்த சட்டத்தரணி சிவா இராஜரத்தினத்தின் மகன் ஆவார். திருகோணமலையைப் பூர்வீகமாகக் கொண்ட இவரது தந்தை-வழிப் பாட்டனார் டி. இராஜரத்தினம் முடிக்குரிய வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.[6] கல்விராஜரத்தினம் தனது பாடசாலைக் கல்வியை பம்பலப்பிட்டி, புனித பீட்டர்சு கல்லூரியிலும், கொழும்பு றோயல் கல்லூரியிலும் கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1987 நவம்பர் 6 இல் உயர்நீதிமன்ற வழக்கறிஞரானார். இலண்டன் குயீன் மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தைப் பெற்று வழக்குரைஞர் ஆனார்.[7] சட்டப் பணி1988 ஏப்பிரலில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சேர்ந்து அரச அரச சட்டவாதியானார். பின்னர் 1998 இல் மூத்த அரச சட்டவாதியாகப் பதவி உயர்வு பெற்றார். 2005 இல் இவர் பிரதி மன்றாடியார் நாயகமாகவும், 2014 இல் மேலதிக மன்றாடியார் நாயகமாகவும், 2018 இல் மூத்த மேலதிக மன்றாடியார் நாயகமாகவும் நியமிக்கப்பட்டார்.[7][8] 2014 இல், இவர் அன்றைய அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் முடிக்குரிய வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார்.[7] 2019 அக்டோபரில், அன்றைய மன்றாடியார் நாயகம் தில்ருக்சி டயசு விக்கிரமசிங்க அவங்கார்டு நிறுவனத் தலைவர் நிசங்க சேனாதிபதியுடன் முன்னெடுத்ததாகக் கூறப்படும் தொலைபேசி அழைப்புத் தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜரத்தினம் பதில் மன்றாடியார் நாயகமாக நியமிக்கப்பட்டார்.[9][10] 2015 இல் சட்ட ஆணைக்குழு உறுப்பினராகவும், 2019 இல் கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்விப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 2019 இல் இவர் சிறுவர் முறைகேடுகள் தொடர்பிலான கோப்புக்களைக் கண்காணிக்கும் பிரிவுக்கு பொறுப்பானவராகப் பணியாற்றினார். 1997 முதல் உயர்நீதிமன்றத்தில் முக்கியமான மனித உரிமை மீறல் வழக்குகளில் அரசு சார்பாக வழக்காடியுள்ளார்.[6] சட்டமா அதிபர்2021 மே 20 இல், நாடாளுமன்றப் பேரவை சஞ்சய் ராஜரத்தினத்தை சட்டமா அதிபராக நியமிக்க ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து,[11][12][13][14] 2021 மே 26 அன்று அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச இவரை சட்டமா அதிபராக நியமித்தார். குடும்பம்சஞ்சய் இராசரத்தினத்தின் மனைவி தர்மினி இராசரத்தினம் மருத்துராகப் பணியாற்றுகிறார்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia