சதாசிவ பிரமேந்திரர்
சதாசிவ பிரம்மேந்திரர் (Sadasiva Brahmendra) தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தியும், கருநாடக இசை அறிஞரும் ஆவார். [2]போதேந்திர சரஸ்வதி மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியோர்களின் சமகாலத்தில் வாழ்ந்தவர். வாழ்க்கைசோமசுந்தர அவதானி - பார்வதி இணையருக்கு சிவராமகிருஷ்ணன் எனும் இயற்பெயருடன் கும்பகோணத்தில் பிறந்தவர். போதேந்திர சரஸ்வதி மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியவர்களுடன் ஒரே குருகுலத்தில் வேதம் பயின்றவர். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி, பிரம்ம ஞானம் பெற சந்நியாசம் மேற்கொண்டு உலகைச் சுற்றிவரலானார். [3] பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு நூல் மூலம், சதாசிவ பிரமேந்திரரின் யோக சக்திகள் அறிய முடிகிறது. அட்டாங்க யோக சித்திகளை அடைந்தவர்.[4][5][6][7] கோயில் பணியில்புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு தட்சிணாமூர்த்தி மந்திரத்தை, மண்ணில் எழுதிக் கொடுத்தது, இன்றும் புதுக்கோட்டை அரண்மனையில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் உள்ளது.[8][9] தஞ்சாவூரில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைக்க காரணமானவர். தேவதானப்பட்டியில் காமாட்சி அம்மன் கோயிலை நிறுவியவர். கரூரில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலை நிர்மாணிப்பதில் பங்கு கொண்டவர்.[10] தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச கோயிலில் அனுமார் விக்கிரகத்தை நிர்மாணித்தவர்.[11] திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலின் ராகு தலத்தில் கணபதி இயந்திர மந்திரத் தகட்டை எழுதிப் பதித்தவர். சமாதிகள்![]() சதாசிவ பிரமேந்திரரின் சமாதி மூன்று இடங்களில் உள்ளது. படைப்புகள்நூல்கள்
பாடல்கள்பாமர மக்கள் அத்வைத அறிவை பெறும் பொருட்டு கருநாடக இசையில் எளிய பாடல்களில் விளக்கியுள்ளார். அவைகளில் பிரபலமானவைகள்:
திரைப்படத்தில்மகாசக்தி மாரியம்மன் என்ற திரைப்படத்தில், சதாசிவ பிரமேந்திரின் அஷ்டாங்க யோக சித்திகள் காட்டப்படுகிறது.[சான்று தேவை] கலைகளில்தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சதாசிவ பிரமேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, தோழன் எனும் புதினத்தை எழுதியுள்ளார். படக்காட்சியகம்
இதனையும் காண்கவெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க |
Portal di Ensiklopedia Dunia