சந்திரா (திரைப்படம்)
சந்திரா (Chandra) இது 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு கற்பனை சரித்திரப்படம் ஆகும். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் நடிகர், இயக்குநர், மாடல், சமூகநலவாதி என பன்முகங்களை கொண்ட ரூபா அய்யர். கற்பனை காதல் கதையாக எழுதி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சிரேயா சரன் மற்றும் கதாநாயகனாக பிரேம் குமார் நடித்துள்ளார்கள். ஒரு முக்கிய கதாபத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் விவேக் நடிக்கின்றார்கள். இத்திரைப்படம் 27 சூன் 2013 அன்று கன்னடம் மொழியிலும் 14 பெப்ரவரி 2014 அன்று தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.[1][2][3] கதைச்சுருக்கம்இந்த திரைப்படம் ஒரு இளவரசியின் கடந்த தலைமுறை காதல் வாழ்க்கையை மையமாக எடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள்
வெளியீடுஇந்த திரைப்படம் கன்னட மொழியில் 2013 சூன் 27 இல் வெளியிடப்பட்டு நல்ல விமர்சனங்கள் பெற்றதுடன் வணிக வெற்றியும் அடைந்தது. அதே நேரத்தில் அதிக வசூல் செய்த கன்னடத் திரைப்படங்களில் ஒன்றானது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia