சந்த் கௌர்
சந்த் கவுர் (Chand Kaur;1802 - 11 சூன் 1842) சீக்கிய பேரரசின் மகாராணி ஆவார். இவரது கணவர் கரக் சிங், ஒரே மகன் நவ் நிஹால் சிங் ஆகிய இருவரும் இறந்த பிறகு, இவர் நௌ நிஹால் சிங் மற்றும் அவரது கர்ப்பிணி விதவை சாஹிப் கௌர் ஆகியோரின் பிறக்காத குழந்தைக்காக தன்னைஅரசப் பிரதிநிதியாக அறிவித்துக் கொண்டார். சாஹிப் கௌர் ஒரு இறந்த மகனைப் பெற்றபோது இவர் தனது கோரிக்கையை கைவிட்டார். மேலும், போட்டியாளர் ஷேர் சிங்கை எதிர்த்து இலாகூரில் நடந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு தலைமை தாங்கினார்.[2] தனது வேலைக்காரர்களால் 11 சூன் 1842 அன்று படுகொலை செய்யப்பட்டார்.[1] சுயசரிதைசந்த் கௌர், பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பதேகர் சூரியனில் ஒரு ஜாட் சீக்கிய சந்து குடும்பத்தில் 1802 இல் பிறந்தார்.[1] இவருடைய தந்தை சர்தார் ஜெயமால் சிங், கன்ஹையா சிற்றரசின் தலைவராவார். பிப்ரவரி 1812 இல், தனது பத்து வயதில், மகாராஜா ரஞ்சித் சிங்கின் மூத்த மகன் குன்வர் கரக் சிங்கை மணந்தார். இவர்களின் மகன், நவ் நிஹால் சிங், 23 பிப்ரவரி 1821 இல் பிறந்தார். இவர் மார்ச் 1837 இல் ஷாம் சிங் அடரிவாலாவின் மகள் சாஹிப் கௌரை மணந்தார். மகனின் ஆட்சி27 சூன் 1839 இல் ரஞ்சித் சிங்கின் மரணத்திற்குப் பிறகு, கரக் சிங் அவரது வாரிசாகவும், ராஜா தியான் சிங் டோக்ரா அவரது ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனர்.[3] புதிய மன்னன் அக்டோபர் 1839 வரை சில மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தார். அவருடைய மகன் நாவ் நிஹால் சிங் மற்றும் தியான் சிங் ஆகியோரின் சதித்திட்டத்தில் அவர் அரியணையிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இலாகூரில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் நவம்பர் 1840 இல் மெதுவாக கொல்லும் நஞ்சு அளிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[4] தியான் சியாவின் உத்தரவின் பேரில் நஞ்சு கொடுக்கப்பட்டதாக சமகால வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.[5] நவம்பர் 5 ஆம் தேதி தனது தந்தையின் தகனத்திலிருந்து திரும்பிய நவ் நிஹால் சிங், குலாப் சிங்கின் மகன் உதாம் சிங் மற்றும் தியான் சிங்கின் மருமகன் ஆகியோருடன் ஹசூரி பாக் வாயில் வழியாக சென்றார். அவர்கள் வாயில் வழியாக செல்லும்போது மேலே இருந்து கற்களை வீசி உதாம் சிங்கைக் கொன்றனர். இளவரசரை காயப்படுத்தின. சில அடிகள் பின்தங்கிய தியான் சிங் உடனடியாக இளவரசனை கோட்டைக்குள் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். கோட்டைக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை, அவரது தாயும் நண்பர்களும் அவரைப் பார்க்க அனுமதித்தபோது, அவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்தார்.[6] இறப்புகடைசியாக இவர் இலாகூரில் உள்ள தனது மறைந்த மகனின் அரண்மனைக்குச் சென்று ஓய்வு பெற்று 900,000 ரூபாய் ஓய்வூதியமாகப் பெற்றார். சிறிது காலம் லாகூரில் உள்ள தனது மறைந்த மகனின் அரண்மனையில் வசித்து வந்தார். இருப்பினும் இவரது எதிரிகள் இவரை ஒரு அச்சுறுத்தலாகவே கருதினர். எனவே 1842 சூன் 11 அன்று இவர் வேலைக்காரர்களால் மரக்கட்டையால் அடித்து கொல்லப்பட்டார்.[1] இவரது சமாதி லாகூரில் உள்ள இஸ்லாமியா கல்லூரியின் மைதானத்தில் உள்ளது.[7] மேற்கோள்கள்Harbans Singh, Editor-in-Chief. "Encyclopaedia of Sikhism". Punjab University Patiala. Archived from the original on 12 September 2016. Retrieved 2 February 2013.
|
Portal di Ensiklopedia Dunia