சப்தகன்னியர்![]() ![]() ![]() இந்து சமயத்தில் சப்தகன்னியர் அல்லது சப்தமாதர் (Matrikas அல்லது Saptamatrikas) எனப்படுவோர் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆவர். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் ஆதிசக்தி எடுத்த திருமேனிகளே, சப்த கன்னியர் என்றும் சப்த மாதாக்கள் என்றும் சப்த மாத்திரிகைக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சப்த மாதாக்கள் எனவும் ஏழு கன்னியர்கள் எனவும் அறியப்படுகிறார்கள். தங்கள் குலதெய்வம் யாதென்று அறியாதவர்கள் சப்த கன்னியர்களை குலதெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சப்த கன்னியரின் தோற்றம்சிவன் அந்தகாசூரன் எனும் அரக்கனுடன் போர் புரிந்தார். அப்பொழுது அந்தகாசுரனின் உடலில் இருந்து வெளிபடுகின்ற இரத்தத்திலிருந்து அசுரர்கள் தோன்றினார்கள். அவர்களை அழிக்கும் பொருட்டு சிவன் தன் வாய் அக்கினியிலிருந்து யோகேசுவரி என்ற சக்தியை தோற்றுவித்தார். யோகேசுவரி மகேசுவரி என்ற சக்தியை உருவாக்கினார். மகேசுவரிக்கு துணையாக பிரம்மா பிராம்மியை தோன்றுவித்தார். விஷ்ணு வைஷ்ணவியை தோற்றுவித்தார். இந்திரன் இந்திராணியையும், முருகன் கௌமாரியையும், வராக அவதாரம் வராகியையும், சண்டி சாமுண்டியையும் தோன்றுவித்தனர் மற்றும் அவர்கள் அந்தகசூரனை அழித்தனர். சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் மற்றும் அவர்களை அழித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது. காளிதாசனின் குமாரசம்பவம் என்ற காவியத்தில் சப்த கன்னியர் சிவனின் பணிப்பெண்டிர் என்ற குறிப்புக் காணப்படுகின்றது.[1] சப்தகன்னியரின் தோற்றத்தினைப் பற்றி மற்றொரு புராணக் கதையில் மகிசாசுரன் கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென வரம் பெற்றிருந்தார். அதனால் தேவர்களும், முனிவர்களும் மகிசாசுரனால் துன்பமைடைந்தனர். அனைவரும் சென்று சிவனிடம் தங்களை காத்தருள வேண்டினர். உமையம்மையிடம் அனைவரையும் காத்தருள வேண்டினார் சிவன். அதனால் உமையம்மை தன்னிலிருந்து சப்த கன்னியர்களை தோன்றுவித்து மகிசாசுரனை அழித்தார். மகிசாசுரன் கொல்லப்பட்டதால் சப்த கன்னியர்களை கொலைப்பாவம் சூழ்ந்தது. அதனை நீக்க வேண்டி சப்தகன்னியர் சிவனை வேண்டினர். சிவன் கோலியனூர் எனும் தலத்தில் தன்னை வழிபட்டு வரும்படி கூறினார். சப்த கன்னியர்களை பாதுகாக்க தன்னுடைய அம்சமான வீரபத்திரனை உடன் அனுப்பி வைத்தார். இத்தலத்தில் சப்த கன்னியருக்கு தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்து கொலைப்பாவத்தினை நீக்கினார்.[2] சப்த கன்னிகள்பிராம்மிபிராம்மி என்பவர் பிரம்மாவின் அம்சமாவார். இவர் நான்கு கரங்களை உடையவர். அன்னப்பறவையை வாகனமாக கொண்டவர். வெண்ணிற ஆடை அணிந்தவராகவும், ஸ்படிக மாலையை ஆபரணமாக தரித்தவராகவும் உள்ளார்.[3] மகேசுவரிமகேசுவரி என்பவர் சிவனின் அம்சமாவார். இவர் சிவனைப் போன்று முக்கண்ணும், ஐந்து திருமுகமும் உடையவர். கரங்களில் பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு என்ற ஐந்து ஆயுதங்களை தரித்தும், ரிசபத்தினை வாகனமாக கொண்டவர்.[4] கௌமாரிகௌமாரி என்பவர் முருகனின் அம்சமாவார். இவர் நான்கு கரங்களையும், பின் இரு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தரித்து காணப்படுகிறார். மயில் பறவையினை வாகனமாக கொண்டவர். சேவல் கொடியினை கைகளில் தாங்கியிருப்பவர்.[5] வைஷ்ணவிவைஷ்ணவி என்பவர் விஷ்ணுவின் அம்சமாவார். இவருக்கு நாராயணி என்ற மறுபெயருண்டு. இவர் நான்கு கரங்களையும், பின் இரு கைகளில் சக்கரத்தினையும், சங்கினையும் தரித்துக் காணப்படுகிறார்.[6] வராகி![]() வராகி விஷ்ணுவின் வராக அவதாரத்தின் அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், நான்கு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். இந்திராணிஇந்திராணி தேவலோகத்து அரசனான இந்திரனின் அம்சமாவார். நான்கு கரங்களை கொண்ட இவர், பின் இரு கரங்களில் சக்தியையும், அம்பினையும் ஆயுதமாக கொண்டு காட்சியளிக்கிறார். ரத்தின கிரீடம் தரித்து வெண் யானை வாகனத்தில் அமர்ந்திருப்பவர்.[7] சாமுண்டிசாமுண்டி என்பவர் சண்டியின் அம்சமாவார். நான்கு கரங்களும், மூன்று நேத்திரங்களும், கோரைப்பற்களும், கரு மேனியும் உடையவர். இவர் புலித்தோல் உடுத்தி கபால மாலையை அணிந்திருக்கிறார். முத்தலைச் சூலம், முண்டம், கத்தி, கபாலம் ஆகிய ஆயுதங்களை தரித்தும், பிணத்தின் மீது அமர்ந்தும் காட்சியளிக்கிறார். இவர் சண்டர் முண்டர் என்ற அரக்கர்களை அழித்த அவதாரம் ஆவர்.[8] கோயில்களில் சப்த கன்னியர்சோழர் காலத்திய கோயில்கள் மற்றும் அதற்கு முந்தையகால கோயில்களிலும் சப்தமாதர் சிற்றாலயங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. அதற்கு பிற்பட்ட காலத்தில் சப்தமாதர் வழிபாடு அருகிவிட்டது. சப்தமாதர் வழிபாடு இந்தியா முழுவதும் இருந்ததற்குச் சிற்ப, ஓவிய, செப்புப் படிமத் தடயங்கள் பல உண்டு. ஆனால் இவர்களுக்குத் தனிச் சிற்றாலயங்கள் எழுப்பும் வழக்கம் தென்னிந்தியாவில் மட்டுமே இருந்தது.[9]
சப்த மாதர்கள் வழிபட்ட கோயில் தலங்கள் )
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia