சித்தகிரி கிராம்ஜீவன் அருங்காட்சியகம் (கனேரி மடம்)
சித்தகிரி கிராம்ஜீவன் அருங்காட்சியகம் (கனேரி மடம்) Siddhagiri Gramjivan Museum (Kaneri Math) என்பது இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் மாவட்டம் கனேரியில் உள்ள சிற்பங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தின் முழுப் பெயர் சித்தகிரி கிராம்ஜீவன் (கிராம வாழ்க்கை) அருங்காட்சியகம் என்பதாகும்.இது ஸ்ரீ க்ஷேத்ரா சித்தகிரி மடத்தில் அமைந்துள்ளது. சித்தகிரி மடமானது மூலா-காட்ஸிதேஸ்வர் சிவன் கோயிலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள மடமாகும். [1] அருங்காட்சியக விளக்கம்இந்த அருங்காட்சியகத்தின் கிராம்ஜீவன் எனப்படுகின்ற கிராம வாழ்க்கையைப் பற்றிய வெவ்வேறு அம்சங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கிராம் என்றால் கிராமம் என்றும், ஜீவன் என்றால் மராத்தி மொழியில் வாழ்க்கை என்றும் பொருள் ஆகும். இதற்கான முன்முயற்சி என்பதானது மகாத்மா காந்தியின் கனவாக இருந்தது. இது சித்தகிரி குருகுல அறக்கட்டளையின் மேற்பார்வை மற்றும் முயற்சி மூலம் முழு வடிவம் பெற்றது. முகலாயர்களின் படையெடுப்பிற்கு முன்னர் மகாராஷ்டிராவில் தன்னிறைவு பெற்ற கிராம வாழ்வின் வரலாறு இங்கு சிமென்ட் சிற்பங்களின் வடிவங்கள் மூலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அன்றாட கிராம வாழ்க்கையில் நிகழ்த்தப்படும் செயல்பாடுகளைக் குறிக்கின்ற வகையில் ஒவ்வொரு சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. 12 பாலுடேதர்கள் [2] எனப்படுகின்ற பரம்பரை கிராம சேவர்கள் (குறிப்பாக கலை இனத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றும் 18 அலுடேதர்கள் உள்நாட்டு மற்றும் தொழில்முறை பணிகளைச் செய்வதற்கான உபகரணங்கள் தொடர்பான பணிகளை மேற்கொண்டனர். இந்த அருங்காட்சியகம் 7 ஏக்கர்கள் (28,000 m2) பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமப்புறங்கள் அழகாகவும், பசுமையானதாகவும் காணப்படுகிறது. கிராம வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் கிட்டத்தட்ட 80 காட்சிகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. அவை 300 க்கும் மேற்பட்ட சிலைகள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கிராமப்புறக் காட்சிகள்இங்கு (1) கிராம பூசாரி தங்குமிடம். முதல் காட்சி அதிகம் படித்த கிராம பூசாரியின் வீடு. அவர் தனது கடமைகள், சடங்குகள் மற்றும் திருமணங்கள் மற்றும் நூல் விழாக்கள் போன்ற சடங்குகளைச் செய்கிறார். மேலும் வீடு கட்டுதல் மற்றும் வீடு வெப்பமயமாதல் நடவடிக்கைகள், கிணறுகள் தோண்டுவது, விதைகளை விதைப்பது, மூக்கு அல்லது காதுகளைத் துளைத்தல் போன்ற எந்தவொரு புனித செயலுக்கும் நல்ல நாட்களையும் நேரங்களையும் குறித்துத் தருவார். அவர் பெறும் தட்சணை (நன்கொடைகள்) மூலமாக தன் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்கிறார். நல்ல தேதிகளைக் கண்டுபிடிப்பதற்காக அவர் பஞ்சாங்கைப் (பஞ்சாங்கத்தை) பார்த்துக் கொள்கிறார், (2) வேலையில் பொற்கொல்லர் (3) ஒரு காளைக்கு லாடம் கட்டும் ஒருவர், (4) முடிதிருத்தும் கடை, (5) கிராம கிணறு - கிராம மக்கள் பொது கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள், (6) ஒரு மூத்த குடும்ப உறுப்பினரை கவனித்துக் கொள்ளல், (7) மளிகை கடை - ஒரு பெண் தன் மகனுடன் மளிகை கடைக்கு வருகிறாள். கடை வைத்திருப்பவர் பழைய எடை போடும் இயந்திரத்தில் பொருட்களை எடைபோடுகிறார். வெல்லம், சர்க்கரை, மிளகாய், உப்பு, கோதுமை, அரிசி போன்ற பொருட்கள் அங்கு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மகன் தன் தாயிடம் தனக்கு காத்தாடிகள் வாங்கச் சொல்கிறான், (8) விவசாயிகளின் வாடா (வீடு), (9) வைத்தியரின் [3] வீடு (10) மெல்லிய மெத்தை போன்ற விரிப்பினைத் தைக்கும் பாட்டி (11) காளை இழுக்கும் கலப்பையைப் பயன்படுத்தி விவசாயிகள் பண்ணையை உழுகிறார்கள், (12) தான் மேய்க்கும் ஆடுகளுடன் ஆடு மேய்க்கும் பையன், (13) பஜனை மற்றும் கீர்த்தனை நிகழ்த்தும் கிராம மக்கள் (இந்து பக்தி பாடல்களைப் பாடுகிறார்கள்) உள்ளிட்ட பல கிராம வாழ்க்கையின் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிவன் கோயில்இந்த அருங்காட்சியக மைதானத்தில் ஒரு பழைய சிவன் கோயில் உள்ளது. [4] இது நிசர்கடத்தா மகாராஜுக்குச் சொந்தமானது. அவர் இஞ்சேகேரி சம்பிரதாயத்துடன் தொடர்பு கொண்டவர் ஆவார். லிங்காயத் பூசாரி ஒருவரால் ஒரு சிவலிங்கம் ஒரு அழகான மலை மீது 14 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரீ காத்சித்தேஷ்வர் மகாராஜ் என்று அழைக்கப்படுகின்ற ஒரு லிங்காயத் பூசாரி அதனை மேம்படுத்திப் புதுப்பித்தார், ஆகையால், இந்த இடம் இப்போது அவரது பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் 125 அடிகள் (38 m) ஆழத்தைக் கொண்ட ஒரு குளம் உள்ளது. மேலும் இங்கு 42 அடிகள் (13 m) உயரத்தினைக் கொண்ட ஒரு சிவன் சிலை மற்றும் ஒரு பெரிய நந்தியைக் காண முடியும். [5] [6] குறிப்புகள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia