சித்தலிங்கையா
கவிஞர் சித்தலிங்கையா (Siddalingaiah, 1954 – 11 சூன் 2021) இவர் கன்னட மொழிக் கவிஞரும், தலித் இயக்கவாதியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கன்னட தலித்பந்தயா இயக்கத்தில் பங்குபெற்று, தலித் மக்களுக்காக எழுதத் தொடங்கினார். இவர் பி. கிருசுனப்பாவுடன் இணைந்து தலித் சங்கர்சு சமித் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். 1994 ஆம் ஆண்டில் தனது 34ஆம் அகவையில் கருநாடக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2006 முதல் 2008 வரை மாநில அமைச்சர் தகுதிக்கு இணையான கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். இவர் காம்பி கன்னட பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும், கன்னடமொழித்துறையின் தலைவராகவும் இருந்துள்ளார். தலித் இயக்கத்தின் முக்கிய தலைவரும் அறிஞரும் கவிஞரும் ஆவார்.[1]. நூற்பட்டியல்
மறைவுகவிஞர் சித்தலிங்கையா 2021 சூன் 11 இல் கோவிட்-19 பெருந்தொற்றினால் பீடிக்கப்பட்டு பெங்களூரில் காலமானார்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia