சித்ரபு நாராயண ராவ்
சித்ரபு நாராயண ராவ் (Chitrapu Narayana Rao, பிறப்பு சித்ரபு நாராயண மூர்த்தி ; 1913-1985) என்பவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். எதிர்பாராதது (1958), அன்னையின் ஆணை (1962) ஆகிய படங்களுக்காக சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றார். 1967 ஆம் ஆண்டு தெலுங்கு படமான பக்த பிரகலாதாவுக்காக நந்தி விருதையும் பெற்றார். [1] தனிப்பட்ட வாழ்க்கைஇவர் 1913 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் (தற்போதைய ஆந்திரப் பிரதேசம் ) மச்சிலிப்பட்டினத்தில் பிறந்தார். திரைப்பட இயக்குநர் சித்ரபு நரசிம்ம ராவ், இவரது சகோதரர். இவர் 1962 இல் தன் மகனை இழந்தார். இவர் 1985 ஆம் ஆண்டு இறந்தார். தொழில்சீதா கல்யாணம், சதி துளசி, மோகினி ருக்மாங்கதா, கிருஷ்ண ஜராசந்தா போன்ற படங்களில் தன் தம்பி சித்ரபு நரசிம்ம ராவுக்கு உதவியாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். வேமுரி கக்கையா மற்றும் சிறீரஞ்சனி நடித்த பக்த மார்கண்டேயா திரைப்படம் இவர் இயக்குநராக அறிமுகமான படமாகும்.[2] அந்தப் படம் இவரை ஒரு இயக்குநராக சிறப்பாக நிலைநிறுத்தியது. தொடர்ந்து மைராவணா, பக்த பிரகலாதா, தக்ஷ யக்ஞம், பீஷ்மா போன்ற பல படங்களை தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இயக்கினார். அதே காலகட்டத்தில், தனது நிதிநிலையைப் பெருக்குவதற்காக ஏ.வி.எம். புரொடக்சன்சுக்கு ஒரு திரைப்படத்தை இயக்க விரும்பினார். அவர்கள் 1965 ஆம் ஆண்டு முதல் முறையாக ஈஸ்ட்மேன் நிறத்தில் தயாரித்த பக்த பிரகலாதாவில் பணிபுரியத் தொடங்கினர். இது 25 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கருப்பு வெள்ளைப் படமாக உருவாக்கிய படத்தை விட தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தப் படத்திற்கு டி.வி. நரச ராஜு இணை எழுத்தாளராக இருந்தார். இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. விருதுகள்
திரைப்படவியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia