சி.எச் முகமது கோயா
சி. எச். முகமது கோயா (ஆங்கிலம்: C. H. Mohammad Koya) (பிறப்பு:15 ஜூலை 1927 - இறப்பு: செப்டம்பர் 1983 28), சி. எச். எனவும் அழைக்கப்படுகிறார் [1], இவரது முழுப்பெயர் செரியன் கந்தி முஹம்மது கோயா என்பதாகும். இவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பத்திரிகையாளர் ஆவார். [2] இவர் 1979 அக்டோபர் 12 முதல் திசம்பர் 1, வரை கேரளாவின் எட்டாவது முதலமைச்சராக பணியாற்றியவர். இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்கின் நீண்டகால செயலாளராக இருந்த அவர் கேரள முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே முஸ்லீம் ஆவார். கேரளாவின் கல்வி அமைச்சராக இருந்த காலங்களில்,(1967 முதல் 1977 வரை) வடக்கு கேரளாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். அவர் உள்துறை அமைச்சராகவும் (1969-73), கேரளாவின் துணை முதல்வராகவும் (1981-83) ஆண்டு காலத்தில் பணியாற்றினார் அமைச்சரவை1957 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தலில் கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அப்போது கேரள அமைச்சரவையின் பல முக்கிய பதவிகளை வகித்தார் (கல்வி அமைச்சர், துணை முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர்). அவர் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் பல முதல்வர்களின் ( ஈ.எம்.எஸ். நம்பூதிர்பாடு, செ அச்சுத மேனன், கருணாகரன், ஏ. கே. அந்தோனி , மற்றும் பி.கே. வாசுதேவன் நாயர் ) கீழும் பணியாற்றினார். [1] [2] கேரள பல்கலைக்கழக செனட் சபை உறுப்பினராக இருந்த அவர், கோழிக்கோடு, தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின்,ஆட்சிக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். [3] பிறப்புசெரியன் கண்டி முஹம்மது கோயா எனும் சி. எச். கோயா 1927 ஆம் ஆண்டு வடக்கு கேரளாவில் உள்ள அதோலியில் பயம்புனத்தில் அலி மற்றும் மரியம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[2] [4] கல்விஅவர் கோழிக்கோடு உயர்நிலைப்பள்ளியிலும் தொடர்ந்து கோழிக்கோடு சமோரியன் கல்லூரியில் பயின்றார். சமோரியன் கல்லூரியில் மாணவராக இருந்தபோது முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பை நிறுவினார். பத்திரிக்கை ஆசிரியராகஅவர் 1945 இல் லியாகத் அலிகானை கோழிக்கோடு வந்திருந்தபோது காப்பாற்றி அவருக்கு உதவினார். 1946 ல் முஸ்லீம் லீக்கின் அதிகாரப்பூர்வ சந்திரிக்கா என்ற செய்தித்தாளில் சி.எச் பணியில் சேர்ந்தார். [5] இடைநிலைக் கல்வி மட்டுமே கொண்டிருந்தாலும், சி. எச். துணை ஆசிரியர் பணியிலிருந்து சந்திரிகாவின் ஆசிரியர் பணி வரை 1949 வரை பணியாற்றினார். [1] [6]
— Robin Jeffrey (historian)[7] ஆளுமைசி. எச் ஒரு "தீவிரமான ஒரு சொற்பொழிவாளர்" என்று அனைவராலும் அறியப்பட்டார், மேலும் அறிஞர் ஆர். இ. மில்லரால் "மாப்பில்லா சமூகத்தின் அடிமட்ட நட்சத்திரம்" என்றும் கேரளாவில் "முஸ்லீம் இளைஞர்களின் நாயகன்" என்றும் வர்ணிக்கப்பட்டார். [1] பணிகள்ஒரு கல்வி அமைச்சராக (கேரளா), சி. எச். மதச்சார்பற்ற கல்வியில் மாப்பிலா சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். ஆனால் அதேசமயம், அரபு கல்லூரிகளில் உயர் தரத்தை ஆதரித்தார். [1] கோழிக்கோடு பல்கலைக்கழகம் அவரை கௌரவிக்கும் விதமாக "சி. எச் இருக்கை" என்பதை நிறுவியது. (வடக்கு கேரளா). [8] கேரளாவின் பல்வேறு சமூக மற்றும் மத குழுக்களிடையே சி. எச் ஒரு நல்லிணக்கத் தலைவராகச் செயல்பட்டார். 1955 இல் இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்கை பகிரங்கமாக விமர்சித்தபோது இந்தியப் பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவுக்கு "தகுந்த" பதிலளித்ததற்காக சி. எச். நினைவு படுத்தப்படுகிறார். சட்ட மன்றத்தில்
நாடாளுமன்றத்தில்அவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1962 (1962 - 67) கோழிக்கோடு மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள மந்திரி சபையில்
இறப்பு1983 செப்டம்பரில் கேரள துணை முதல்வராக பணியாற்றியபோது சி. எச். காலமானார். [3] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia