சுப்பிரமணியம் சிவா
சுப்பிரமணியம் சிவா (Subramaniam Siva) என்பவர் தமிழ் திரையுலகில் பணிபுரியும் ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். துவக்ககால வாழ்க்கைசுப்பிரமணியம் சிவா தமிழ்நாட்டில் பிறந்தவர். இவர் முதலில் வி. இசட். துரையிடம் உதவியாளராக இருந்தார். பின்னர் இயக்குநரானார். தொழில்இயக்கம்2003 இல் தனுஷ், சாயா சிங் நடித்த காதல் நகைச்சுவைத் திரைப்படமான திருடா திருடி மூலம் சுப்பிரமணியம் சிவா இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியைத் தொர்ந்து, அப்படத்தை தெலுங்கில் தொங்க தொங்கடி (2004) என்ற பெயரில் புதிய நடிகர்களைக் கொண்டு மறுஆக்கம் செய்தார். அதைத் தொடர்ந்து இவர் ஜீவாவைக் கொண்டு பொறி (2007) என்ற படத்தை உருவாக்கினார். பின்னர் அமீர் இயக்கிய யோகி (2009) படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் தயாரிப்புப் பணி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது.[1] இவர் இயக்கிய ஐந்தாவது படமாக சீடன் (2011) உருவானது. அது 2002 மலையாள படமான நந்தனம், என்ற படத்தின் மறுஆக்கமாகும். அதில் உன்னி முகுந்தன், அனன்யா முன்னணி பாத்திரங்களில் நடிக்க, தனுஷ் விருந்தினர் தோற்றதில் தோன்றினார். வேலையில்லா பட்டதாரி (2014) படத்தின் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் உதவினார் மேலும் அம்மா கணக்கு (2016) படத்திற்கு உரையாடல்களை எழுதினார்.[2][3] இவர் 2021 ஆம் ஆண்டு படம் சமுத்திரக்கனி, ஆத்மியா ராஜன், யோகி பாபு ஆகியோர் நடித்த வெள்ளை யானை மூலம் மீண்டும் இயக்குநராக வந்தார். இப்படம் சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. நடிப்புசுப்ரமணியம் சிவா 2018 ஆண்டு வெளியான வட சென்னை மூலம் நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 2019 ஆண்டு அசுரன் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களையும் வெற்றிமாறன் இயக்கியவர். தனுஷ் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். 2021 ஆம் ஆண்டில், இவர் குற்றவியல் படமான ரைட்டர்படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.[4] திரைப்படவியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia