செந்தலை ந. கவுதமன்
செந்தலை ந. கவுதமன் (பிறப்பு- 23 சனவரி 1953) தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர், பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த்தேசிய ஆர்வலர். பாவேந்தர் மீது பெரும் பற்று கொண்டவர். வாழ்க்கைக் குறிப்புசனவரி மாதம் 1954 ல் பிறந்த இவரின் சொந்த ஊர், தஞ்சையை சேர்ந்த செந்தலை ஆகும்.[1] இவர் தன் பள்ளிப் படிப்பை, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சர் சிவசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளியில் (1965 - 1971) முடித்தார். திருவையாறு அரசு கல்லூரியில் (1971 - 1975) தொடர்ந்து புலவர் படிப்பை முடித்து, தமிழாசிரியராக பூ. சா. கோ. சர்வ சன மேல்நிலைப்பள்ளியில் 1978 முதல் 2013 வரை பணி புரிந்தார். மேலும் இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளார். வி. அ. அரங்கசாமி, தி. வே. கோபாலையர் இவரின் ஆசிரியர்கள். தற்போது பணி நிறைவுற்று கோவை மாவட்டம் சூலூர் என்ற ஊரில் வசிக்கிறார். தமிழறிவும், தமிழ்நாட்டின் அரசியல் சமூக வரலாற்று அறிவும் கொண்டவர். பல மேடைகளில் சுவைபடவும், வரலாற்று தகவல்களுடனும் பேசி வருபவர். சூலூர் பாவேந்தர் பேரவை என்ற பெயரில் சூலூரில் மன்றம் ஒன்றையும் நடத்தி வருகிறார். சிறப்புகள்'
வெளியிட்டுள்ள நூல்கள்:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia