செம்மொழி விரைவுத் தொடருந்து
செம்மொழி விரைவுத் தொடருந்து, (Chemmozhi Express) இந்திய ரெயில்வே துறையினரால் கோயம்புத்தூர் சந்திப்பு மற்றும் மன்னார்குடி சந்திப்பு ஆகிய இரு தமிழக நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் விரைவுத் தொடருந்தாகும். 2010ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற செம்மொழி தமிழ் மாநாட்டின் நினைவாக நினைவாக இந்த விரைவுத் தொடர்ந்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விரைவுத் தொடருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இரவு 12.30 மணிக்கு கோயம்புத்தூர் சந்திப்பு நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.40 மணிக்கு மன்னார்குடி சென்றடைகிறது. இந்தத் தொடருந்து மன்னார்குடியிலிருந்து இரவு 8.25 மணிக்கு இயக்கப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு கோயம்புத்தூர் சந்திப்பு நிலையத்தை அடைகிறது. மொத்தமாக 335 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கிறது. இந்த வண்டியின் எண் 16616 ஆகும். மறுமார்க்கமாக 16615 என்ற எண்ணில் இயக்கப்படும். பயணத்திட்டம்இந்தத் தொடருந்தானது தினந்தோறும் இரு வழிகளிலும் இயக்கப்படுகிறது.
நிறுத்தங்கள்16615 வண்டிக்கான நிறுத்தங்கள்
16616 வண்டிக்கான நிறுத்தங்கள்
பயணப் பெட்டிகளின் அமைப்புஓரடுக்கு மற்றும் ஈரடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி, 5 முன்பதிவு மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு சரக்கு பெட்டிகள் 2 என மொத்தம் 15 பெட்டிகள் இந்தத் தொடருந்தில் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
பெயர்க்காரணம்2010 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி செம்மொழி மாநாடு கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டை நினைவு கூறும் கூறும் கூறும் பொருட்டு 2013ஆம் ஆண்டு முதல் முதல் இயக்கப்பட்டு வரும் இந்த தொடருந்துக்கு செம்மொழி விரைவு தொடருந்து என பெயர் வழங்கப்பட்டது.[1] தஞ்சாவூர், கரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஈரோடு என தமிழகத்தின் முக்கிய தொழில் மற்றும் வர்த்தக நகரங்களை இணைக்கும் இந்தத் தொடருந்தானது மொத்த பயண தூரமான 335 கிலோமீட்டரை மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு எட்டு மணி நேரம் 20 நிமிடங்கள் பயணித்து தனது இறுதி நிலையத்தை அடைகிறது. குறிப்புகள்மன்னார்குடி நிலையத்தில் இருந்து தினமும் இரவு, 8:15 மணிக்கு புறப்படும் செம்மொழி விரைவு தொடருந்து தஞ்சை, திருச்சி, ஈரோடு வழியாக மறுநாள் காலை, 4:45க்கு கோவை வந்தடைகிறது. கோயம்புத்தூர் சந்திப்பு நிலையத்திலிருந்து நள்ளிரவு, 12:30க்கு புறப்படும் தொடருந்து காலை, 7:40 மணிக்கு மன்னார்குடி சென்றடைகிறது. காலை, 4:45 மணிக்கு கோவை வந்தடையும் தொடருந்து இரவு, 12:30 மணி வரை மறுபடியும் இயக்கும் வரை நிலையத்திலேயே எவ்வித பயன்பாடுமின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது. மாறாக இந்தத் தொடருந்தை காரைக்குடி அல்லது மதுரை சந்திப்பு நிலையங்கள் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என தொடருந்தில் பயணிப்போர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia