சையத் நசிம் அஹ்மத் ஜெய்தி
சையத் நசிம் அகமது ஜெய்தி (Syed Nasim Ahmad Zaidi) ஓய்வு பெற்ற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவார். உத்திரப்பிரதேசத்தில் இருந்து 1976 ஆம் ஆண்டு தொகுதியிலிருந்து இந்திய அரசுப்பணி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] கல்விஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் அரசாங்கத்திற்கான கென்னடி பள்ளியில் இருந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்வர்டு பன்னாட்டு மேம்பாட்டு நிறுவனத்தின் பொதுக்கொள்கைக்கான வளர்ந்து வரும் நாடுகளுக்கான பொதுத்துறை சார் செயல் அலுவராக இருந்தார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டயப் படிப்பையும், உயிர் வேதியியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பையும் படித்துள்ளார். தொழில்ஜெய்தி நவம்பர் 2005 முதல் அக்டோபர் 2008 வரை பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பின் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக பணியாற்றினார். இவர் உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறையில் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் விமான போக்குவரத்து துறையில் இந்திய அரசாங்கத்தின் செயலாளராக இந்திய ஆட்சிப் பணி பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்றார். பின்னர் பீகார் சட்டசபைத் தேர்தலில் தனது முதல் தலைமை தேர்தல் அதிகாரி பணியை மேற்கொண்டார்.[5] பார்வைநூல்கள்
|
Portal di Ensiklopedia Dunia