2014 : உறுப்பினர், ஆலோசனைக் குழு, நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
2016 - 2019 : உறுப்பினர், வணிக நிலைக்குழு
2019 onwards : உறுப்பினர், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலக் குழு
2019 onwards : உறுப்பினர், போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சார நிலைக்குழு
2019 onwards : உறுப்பினர், ஆலோசனைக் குழு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சௌமித்ரா கான் ( Saumitra Khan ) (பிறப்பு 8 திசம்பர் 1980) 2014 முதல் மேற்கு வங்காளத்தின் பிசுணுபூர் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019இல் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். [2] தற்போது (திசம்பர் 2020 நிலவரப்படி) பாரதிய சனதா யுவ மோர்ச்சாவின் மேற்கு வங்கத்தின் தலைவராக பணியாற்றுகிறார்.
கான், இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2013இல், கத்துல்பூர் தொகுதியிலிருந்து மேற்கு வங்காள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், ஆளும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சிக்கு மாறினார். 2014 இந்திய பொதுத் தேர்தலில், இவர் பிசுணுபூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய சனதா கட்சிக்கு மாறினார். இவர் கட்சியைவிட்டு வெளியேறியதும், வேலை தேடுபவர்களிடம் பணம் பறித்ததாக இவர் மீது காவலர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொல்கத்தா உயர் நீதிமன்றம் இவரை இவரது தொகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்தது. இவர் அப்பகுதியில் எந்த அரசியல் பேரணியைக் கூட நடத்தாமல் 78,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
கான், மேற்கு வங்காளத்தின்பாங்குரா மாவட்டத்திலுள்ள துர்லாப்பூரில் தனோஜாய் கான் - சாயா ராணி கான் ஆகியோருக்கு 8 திசம்பர் 1980 அன்று சூன்ரி ஜாதியின் வங்காள இந்துக் குடும்பத்தில் பிறந்தார்.[3] இவர் பஞ்சமுரா மகாவித்தியாலயாவில் படித்தார். [4] இவரது மனைவி, சுஜாதா மோண்டல், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தபோது, தனது மனைவியை விரைவில் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார். இது மேற்கு வங்க அரசியலில் தொடர்ந்து சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. ஜங்கிள்மகால் மாநிலத்தை இவர் தனி மாநிலமாகக் கோரியபோது மற்றொரு சர்ச்சை ஏற்பட்டது.[5]
அரசியல் வாழ்க்கை
2011 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் , கான் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக கத்துல்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] 12 திசம்பர் 2013 அன்று, இவர் ஆளும் திரிணாமுல் காங்கிரசு கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தார். மாநில காங்கிரசு பிரிவு பாங்குரா மாவட்டத்தை புறக்கணிப்பதாக இவர் குற்றம் சாட்டினார்.[7] நான்கு நாட்களுக்குப் பிறகு,இவர் அதிகாரப்பூர்வமாக திரிணாமுல் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.[6]
2014 இந்திய பொதுத் தேர்தலில், கான் பிஷ்ணுபூர் தொகுதியில் இருந்து பதினாறாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்குப் பிறகு ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பிஷ்ணுபூரை ஒரு சுற்றுலா தலமாக வளர்ப்பதும் பாலுச்சாரி புடவை செய்யும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் தனது முன்னுரிமையாக இருக்கும் என்று கூறினார்.[8] 9 ஜனவரி 2019 அன்று, இவர் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறினார்.[9] பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி, கானை கட்சியில் சேர்த்ததில் முகுல் ராய், முக்கிய பங்கு வகித்ததாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது.[10][11]
பிப்ரவரி 2019 இல் கான் பொய்யான வாக்குறுதிகளின் பேரில் வேலை தேடுபவர்களிடமிருந்து பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.[12] கொல்கத்தா உயர் நீதிமன்றம் இவரை பாங்குராவுக்குள் நுழைவதைத் தடுத்தாலும் இவரை கைது செய்ய முடியாது என்று அறிவித்தது.[12] அடுத்த மாதத்தில், இவரை காவலர்கள் விசாரித்தனர்.[13] ஏப்ரல் 12 அன்று, உச்சநீதிமன்றம் இவரது வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்காக மாவட்டத்திற்குள் நுழைய அனுமதித்தாலும் இவர் மீதான தடையை ரத்து செய்ய மறுத்தது.[14] கான் இல்லாத நிலையில், அவரது மனைவி சுஜாதா கான் பொதுத் தேர்தலில் இவருக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.[15] கான் அதே தொகுதியிலிருந்து 78,047 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.[16][17][18]