ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை
ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை (Jhansi Rani, இந்தி: एक वीर स्त्री की कहानी... झाँसी की रानी, மராத்தி: झाशीची राणी, தெலுங்கு: ఝాన్సీ లక్ష్మీబాయి) என்பது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட இந்தி மொழியிலமைந்த சான்சி கி இராணி தொலைக்காட்சி நாடகத் தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்தத் தொடர் இந்தி மொழியில் ஆகத்து 18, 2009 அன்று முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.[1] தமிழ் மொழியில் இந்த நிகழ்ச்சி மார்ச்சு 8, 2010 தொடங்கியது. முதலில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை ஒளிபரப்பப்பட்டது. பின்பு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பானது.[2] சூலை 18, 2011இலிருந்து நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பானது.[3] இது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. தலைப்புக் குறிப்பிடுவது போல, இத்தொடரின் கதையானது 1857 இந்தியக் கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த சான்சியின் இராணி இலட்சுமிபாயினுடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.[4] இந்தத் தொடர் தமிழ் மொழியில் சனவரி 27, 2012 அன்று மகாராணி இலட்சுமிபாயின் வீர இறப்புடன் முடிவடைந்தது. சனவரி 30, 2012இலிருந்து 50 நாட்களில் முடியும் வண்ணம் ஒரு சிறப்புத் தொகுப்பாக இந்தத் தொடரை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி முடித்துள்ளது.[5] தற்போது, 2020 ஆம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பகின்றது. கதைக்கருஇது சான்சி இராணி இலட்சுமிபாய் பற்றிய ஒரு வரலாற்றுத் தொடர் ஆகும். இராணி இலட்சுமிபாயின் சிறு வயதிலிருந்து அவரின் இறப்பு வரையான நிகழ்வுகளை இத்தொடர் மையமாகக் கொண்டுள்ளது.[6] இராணி இலட்சுமிபாய்/மனு பாய்இராணி இலட்சுமிபாய், மௌரியபந்தர் தம்பேயின் மகள் ஆவார். இராணி இலட்சுமிபாய் குதிரையேற்றம், வாட்போர், சுடுகுழலால் சுடுதல் என்பனவற்றில் திறமை வாய்ந்தவர். மறை, பழங்கதை, கீதை என்பனவற்றில் நிறைந்த அறிவுடையவர். இவர் ஒரு நேர்மையான ஆட்சியாளராக இருந்து அனைத்து மக்களுக்கும் அறத்தை வழங்கினார். நானா சாகேபுநானா சாகேபு, மாதவு நாராயண் இராவு என்பவரின் மகன் ஆவார். 1839இல் இரண்டாம் பேசுவா பாசி இராவு என்பவரால் தத்தெடுக்கப்பட்டார். இவர் இரக்கம், துணிவு, அறிவு என்பனவற்றை உடையவர். இவருடைய அறிவாற்றலும் முக்காலவுணர்வும் 1857 இந்தியக் கிளர்ச்சியில் இவரின் முக்கியத்துவத்தை உணர்த்தின. மௌரியபந்தர் தம்பேமனுவின் தந்தையான மௌரியபந்தர் தம்பே மென்மையான இதயம் படைத்தவர். இவர் தனது மகளுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் கூறினார். தனது மகள் சிறந்ததை அறிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மைனா பாய்மைனா பாய், பாசி இராவின் முதலாவது மனைவி ஆவார். இவர் எளிமையான, அடக்கமான, தனது பிள்ளைகளில் அக்கறையுள்ள பெண் ஆவார். இவர் தனது சொந்த மகளைப் போல் மனுவை நேசித்தார்.[7] பேசுவா பாசி இராவுஇரண்டாம் பேசுவா பாசி இராவு ஓர் ஆட்சியாளர். இவருக்கு இரண்டு மகள்கள். இவர் இரண்டு மகன்களைத் தத்தெடுத்துக் கொண்டார். தாந்தியா தோப்பேதாந்தியா தோப்பே, மனு பாயின் ஆசான் ஆவார். மனு, இராணி இலட்சுமிபாயாக வருவதற்கு உதவி புரிந்தவர்களுள் இவரும் ஒருவர். இராணி இலட்சுமிபாயின் இறப்பின் பின் இவர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். வாகினி சாகேபுவாகினி சாகேபு இத்தொடரில் ஒரு புனைவுக் கதைமாந்தர். இவர் பேசுவாக் குடும்பத்தின் மூத்த பெண் ஆவார். வைசாலிவைசாலி இத்தொடரில் ஒரு புனைவுக் கதைமாந்தர். இவர் இயசோதாவின் மகள் ஆவார்.[8] வரலாறுஇராணி இலட்சுமிபாய் நவம்பர் 19, 1835 மௌரியபந்தர் தம்பே, பகீரதிபாய் தம்பே ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[9] இவருக்குப் பெற்றோர் மணிக்கர்ணிக்கா என்று பெயர் சூட்டினர்.[10] மணிக்கர்ணிக்காவுக்கு நான்கு வயதாக இருக்கும்போது பகீரதிபாய் தம்பே இறந்து விட்டார்.[11] 1842இல் மணிக்கர்ணிக்காவுக்கு சான்சியின் மகாராசாவான கங்காதர இராவு நெவல்கருடன் திருமணம் நடைபெற்றது.[12] அதிலிருந்து மணிக்கர்ணிக்கா சான்சி இராணி ஆனார்.[13] திருமணத்தின் பின்பு, மணிக்கர்ணிக்காவுக்கு இலட்சுமிபாய் என்ற பெயர் சூட்டப்பட்டது.[14] 1851இல் இராணி இலட்சுமிபாய் தாமோதர் இராவு என்ற மகனைப் பெற்றெடுத்தார்.[15] என்றாலும் அக்குழந்தை ஏறத்தாழ நான்கு மாதங்களில் இறந்து போனது.[16] அதன் பின்னர், இருவரும் ஆனந்து இராவு என்ற குழந்தையைத் தத்தெடுத்தனர்.[17] பின்னர், அக்குழந்தைக்குத் தாமோதர் இராவு என்ற பெயர் சூட்டப்பட்டது.[18] ஆனாலும் தனது மகனின் இறப்பினால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மீளாத மகாராசா கங்காதர இராவு நெவல்கர் நவம்பர் 21, 1853 இறந்தார்.[19] ஆனாலும் அப்போதைய ஆங்கிலேய ஆணையரான இடல்லவுசி அவகாசியிலிக் கொள்கையின்படி, மகவேற்ற பிள்ளையை உத்தியோக முறையில் ஏற்க மறுத்து, சான்சியையை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வர முயற்சித்தார்.[20] ஆனாலும் இதற்கு மகாராணி இலட்சுமிபாய் ஒத்துக் கொள்ளவில்லை.[21] இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது.[22] இக்கலகத்திற்கு இராணி இலட்சுமிபாய் உதவக்கூடும் என்ற ஐயத்தினால் சூன் 8, 1857 சோக்கன் பாகில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைவர்களைக் கொன்றதாக இராணி இலட்சுமிபாய் மீது குற்றஞ்சுமத்தி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் ஈ உரோசு தலைமையிலான படையை சான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைத்தது.[23] ஆனாலும் மகாராணி இலட்சுமிபாய் தனது படைகளுடன் இணைந்து ஆங்கிலேயர்களுடன் கடுமையாகப் போர் புரிந்தார்.[24] என்றாலும் ஆங்கிலேயர்கள் சான்சி நகரத்தைக் கைப்பற்றியவுடன் ராணி லட்சுமிபாய் தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார்.[25] பின்னர், மகாராணி இலட்சுமிபாய் கல்பி என்ற இடத்துக்குச் சென்று தனது படைகளுடனும் தாந்தியா தோப்பேயின் படைகளுடனும் இணைந்து கொண்டார்.[26] மகாராணியும் தாந்தியா தோப்பேயும் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராசா சயாசிராவு சிந்தியாவின் படையைத் தோற்கடித்தார்கள். அத்தோடு, குவாலியரின் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்டார்கள்.[27] அப்போது, ஆங்கிலேயரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. உடனே, மகாராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர் புரிந்தார். ஆனாலும் போகூழாக சூன் 17, 1858 மகாராணி இலட்சுமிபாய் போரில் இறந்தார்.[28] பகுதியான புனைவுவைசாலி, கங்கா, இலத்தி, வாகினி சாகேபு போன்ற புனைவுக் கதைமாந்தர்களும் இத்தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர்கள்இளைய இராணி இலட்சுமிபாயாக நடித்தவர் உல்கா குப்தா ஆவார். இந்தி மொழியில் சூன் 8, 2010இலிருந்து வளர்ந்த இராணி இலட்சுமிபாயாக நடித்தவர் கிரத்திக்கா செங்கர் ஆவார். இருவரும் இராணி இலட்சுமிபாயாக நடித்ததற்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளனர். மேலும் சமீர் தர்மாதிக்காரி மகாராசா கங்காதர இராவாக நடித்துள்ளார்.
இறுதிப் படலம்கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. காயமடைந்த இராணி இலட்சுமிபாய் தாந்தியா தோப்பேயிடம் இரகுநாத்து சிங்கு திரும்பி வர மாட்டார் எனக் கூறுகிறார். தாமோதரையும் அழைத்துக் கொண்டு கான்பூருக்குச் செல்லுமாறும் அச்சுச் செய்திகளைச் சான் இலாங்கிடம் ஒப்படைக்கும்படியும் தொடர்ந்து கூறுகிறார் இராணி இலட்சுமிபாய். மேலும் சான் இலாங்கு அவற்றைச் செய்தித் தாளில் வெளிவிடுவதால் தமது குறிக்கோள் நிறைவேறி விடுமென்றும் கூறுகிறார். இச்சமயத்தில் பிரித்தானிய வீரர்கள் சான்சி இராணியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். தாந்தியா தோப்பேயையும் தாமோதரையும் இராணி இலட்சுமிபாய் கட்டாயப்படுத்திச் செல்லவைத்தார். இராணி இலட்சுமிபாய் இதற்கிடையில் கோயிலொன்றின் உள்ளே செல்கிறார். படுகாயம் அடைந்த இராணி இலட்சுமிபாய் இராசமாதா, பேசுவா பாசி இராவு, கர்மா, கோவுசு கான், மகாராசா கங்காதர இராவு, மௌரியபந்தர் ஆகியோரின் தோற்றத்தைக் காண்கிறார். அவர்கள் சுதந்திரப் போராட்டத்தைத் தொடருமாறு இராணி இலட்சுமிபாயை வற்புறுத்துகிறார்கள். ஒவ்வொருவரும் இராணி இலட்சுமிபாயின் உடலில் நகைகளாக மாறுகின்றனர். பிரித்தானிய வீரர்கள் கோயிலுள் புகுகிறார்கள். இராணி இலட்சுமிபாய் ஹர ஹர மகாதேவா என்று முழங்கி ஆங்கிலேயர்களைத் துர்க்கையைப் போல் வீரமாகக் கொன்று குவிக்கிறார். உடனே, கோல் கோழையைப் போலே இராணி இலட்சுமிபாயைச் சுடுகிறார். படைவீரர்களை இராணி இலட்சுமிபாயின் கைகளைப் பிடிக்க விட்டு, அவரால் தாக்க முடியாதவாறு செய்துவிட்டுப் பின்பு வாளினாற்தாக்குகிறார் கோல். இராணி இலட்சுமிபாய் காயமடைந்திருந்தபோதிலும் படை வீரர்களைத் தாக்கி விட்டுத் துணிவுடன் கோலின் தலையில் தாக்குகிறார். அனைத்து ஆங்கிலேயர்களையும் அழித்து விட்டுக் கோயிலின் வாயில் வழியாகச் சென்ற வண்டியின் ஓட்டுநரிடம் தன் இறப்பைப் பற்றி யாரும் அறியக் கூடாது என்றும் தன் உடல் தீய ஆங்கிலேயர்களிடம் கிடைக்கக் கூடாது என்று வாக்குப் பெற்றுக்கொண்டு வீர இறப்பு அடைந்தார் இராணி இலட்சுமிபாய். அந்த வண்டி ஓட்டுநர் சான்சி இராணியின் இறுதிக் கடமைகளைச் செய்கிறார். மகாராணி விக்டோரியா ஒழிக என்று இந்தியர்கள் ஊர்வலம் செல்கிறார்கள். இராணி லட்சுமிபாய் இறந்துவிட்டதாகச் சார்லசு கேனிங்கு நம்பவில்லை. இந்தியர்கள் சான்சி இராணி இலட்சுமிபாய் இறந்துவிட்டதை நம்ப மறுக்கிறார்கள், சுதந்திரத் தீயை அணையாமல் காக்கின்றனர்.[31] மகாராசா கங்காதர இராவின் உயிர் இராணி இலட்சுமிபாயின் உயிரை அழைத்துச் செல்கிறது. மகாராணி இலட்சுமிபாய் இறக்கவில்லை. இறக்கவும் மாட்டார்கள். என்றுமே புரட்சியின் தீச் சுடராக நம் மனதில் இருப்பார்கள். வீரதீரச்செயல் மிகுந்த ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை இவ்வாறு முடிவடைந்தது.[32] தலைப்புப் பாடல்இந்தத் தொடரின் தலைப்புப் பாடலைப் பாடகர் திப்பு பாடியிருந்தார்.[33] ஏனைய மொழிகள்இந்தி மொழியில் அமைந்த தொடரானது தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜீ தொலைக்காட்சி, ஜீ தமிழ், ஜீ தெலுங்கு என்பனவற்றில் இத்தொடரானது முழுமையாக ஒளிபரப்பப்பட்டு விட்டது. ஜீ தெலுங்கில் இத்தொடர் இறுதியாக பெப்ரவரி 4, 2012 அன்று ஒளிபரப்பப்பட்டது.[34] ஜீ வலையமைப்பின் ஜீ மராத்தித் (திங்கள்-சனி, பி. ப. 2.00) தொலைக்காட்சியில் அக்டோபர் 31, 2011இலிருந்து இத்தொடர் ஒளிபரப்பப்படுகின்றது.[35] அத்தோடு, இந்தத் தொடர் இந்தி மொழியில் ஆங்கில உப தலைப்புகளுடன் ஜீ தொலைக்காட்சி அமெரிக்கா, ஏ. டி. என். கனடா ஆகிய தொலைக்காட்சிகளில் அக்டோபர் 10, 2011இலிருந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இவ்விரு தொலைக்காட்சிகளிலும் இத்தொடர் ஆகத்து, 2013இல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விருதுகள்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia