ஜெயந்தி பட்நாயக்
ஜெயந்தி பட்நாயக் (Jayanti Patnaik) (பிறப்பு 1932) ஒரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற சமூக சேவகரும் ஆவார்.[2] மகளிர் தேசிய ஆணையத்தின் முதல் தலைவரான இவருடைய பதவி காலம் 3 பிப்ரவரி 1992 முதல் 30 ஜனவரி 1995 வரை இருந்தது.[3][4][5] ஆரம்ப கால வழ்க்கை மற்றும் கல்விஒரிசாவின் கஞ்சாம் மாவட்டத்தில் அசிகா என்னுமிடத்தில் 1932 இல் நிரஞ்சன் பட்நாயக் என்பவருக்கு மகளாக பிறந்தார். அசாரா ஹரிஹர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். கடக்கிலுள்ள உட்கல் பல்கலைக்கழகத்தின் கீழ் சயலாபால மகளிர் கல்லூரியில் சமூகப் பணியில் கலையியல் நிறைஞா் பட்டம் பெற்றார். பின்னர், மும்பையின் டாட்டா சமூக அறிவியல் கழகத்தில் மேற்படிப்பு படித்தாா். 1953 ஆம் ஆண்டில் அரசியல்வாதியும் ஒடிசாவின் முதலமைச்சராக (1980-89) இருந்தவருமான ஜானகி பல்லப் பட்நாயக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia