ஜெய்சூர்யா (திரைப்படம்)
ஜெய்சூர்யா 2004 ஆம் ஆண்டு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடித்து மனோஜ்குமார் இயக்கத்தில், தேவா இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படத்தில் லைலா, சாயாசிங் மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்தனர்.[1][2][3] இப்படம் தெலுங்கில் மொழிமாற்றப்பட்டு இதே பெயரில் வெளியானது.[4] கதைச்சுருக்கம்சூர்யா (அர்ஜுன்) சென்னை நகரத்தின் தாதாவாக இருந்து பல பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கிறான். அவனுடைய உதவியாளராக இருப்பவள் பேபி (லைலா). சூர்யாவும் பேபியும் காதலர்கள். சூர்யாவுக்குப் போட்டியான மற்றொரு தாதா பசுபதி (சோப்ராஜ்). சட்ட விரோதமாகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் தவறான வழிகளில் பணம் சேர்க்கும் காவல் துணை ஆணையர் (இளவரசு) மற்றும் அவரின் சகோதரரான காவல்துறை அமைச்சர் (ராஜ் கபூர்) இருவரும் சூர்யாவின் திட்டத்தால் சிக்கிக் கொள்கின்றனர். இவர்களின் தவறுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கும் சூர்யாவால் அவர்களின் பதவி பறிபோகிறது. இதனால் அவர்கள் சூர்யாவின் எதிரியான பசுபதியின் உதவியுடன் சூர்யாவைக் கொல்லத் திட்டமிடுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுபவர் ஜெய் ஆனந்த் (அர்ஜுன் 2). அவரைக் கடத்தத் திட்டமிடும் கொல்கத்தாவைச் சேர்ந்த தாதா (கோட்டா சீனிவாசராவ்) அதற்காக பசுபதியின் உதவியை நாடுகிறார். இவர்களின் திட்டத்தை அறிந்துகொண்ட சூர்யா ஆட்சியர் ஜெய்யைக் காப்பாற்ற முடிவு செய்கிறான். அவரைக் காப்பாற்றும் போது ஜெய்யை நேரடியாகக் காணும் சூர்யா அவரும் தன் முகத்தோற்றத்துடன் இருப்பதுகண்டு ஆச்சர்யம் கொள்கிறான். ஜெய்யின் காதலி பிரியா (சாயாசிங்) ஜெய்யின் கடந்தகாலம் பற்றி சூர்யாவுக்குச் சொல்கிறாள். இறுதியில் ஜெய்யும் சூர்யாவும் இணைந்து தங்கள் எதிரிகளை எப்படி வெல்கிறார்கள் என்பது மீதிக்கதை. நடிகர்கள்
இசைபடத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் பா. விஜய்
. வெளியீடுநிதி பிரச்சனைகள் காரணமாக படம் நான்கு மாதங்கள் தாமதமாக வெளியானது.[5] விமர்சனம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia