ஜெய்ஸ்-இ-முகமது
ஜெய்ஸ்-இ-முகமது (Jaish-e-Mohammed, உருது: جيش محمد) இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் போராளிக் குழு ஆகும்.[1] ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் உருதுச் சொல்லுக்கு முகம்மதின் படை என்று பெயர். இது ஒரு ஜிகாதியப் போர்க்குழுவாகும். காஷ்மீரில் இயங்கும் போராளிக் குழுக்களுள் மிகவும் கடுமையான குழு இது ஆகும்.[1][2] குறிக்கோள்இந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள் காஷ்மீரைத் தனி நாடாக்குவதாகும். இதன் பொருட்டு காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.[3][4] தடைஇந்த அமைப்பு 2002 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் நாட்டில் தடை செய்யப்பட்ட போதும், அதன் செயல்பாடுகள் பாகிஸ்தானில் தொடர்கின்றன.[5] இப்போராளிக் குழுவை இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன.[1] வரலாறு2000 ஆம் ஆண்டு மௌலானா மசூத் அசார் இக்குழுவைத் தொடங்கினார். இவர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தலின் போது விடுவிக்கப்பட்டவர்.[1][2][6] விடுதலைக்குப் பின் ஹர்கத்-உல்-முஜாகிதீன் போராளிக் குழுவிலிருந்து விலகி, இக்குழுவை ஆரம்பித்தார். ஹர்கத்-உல்-முஜாகிதீன் இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் இவரது ஜெய்ஸ்-இ-முகம்மது இயக்கத்தில் இணைந்தனர்.[2] 2002 ஆம் ஆண்டு சனவரி மாதம் இப்போராளிக் குழுவை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் தடை செய்தார். தடையின் காரணமாக இக்குழு தனது பெயரை குத்தாம் உல்-இஸ்லாம் (Khuddam ul-Islam) என மாற்றிக் கொண்டது.[1] 2019 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று புல்வாமா எனும் இடத்தில் தீவிரவாத தாக்குதல்நடந்தது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் துரதிர்ஷ்டவசமான தாக்குதலான இது, இந்த இயக்கத்தால் நடத்தப்பட்டதாக இந்திய அரசு தகவல்கள் வெளியிட்டது. முக்கிய நிகழ்வுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia