ஜோகிந்திரநாத் மண்டல்
ஜோகிந்தார் நாத் மண்டல் (Jogendra Nath Mandal) (Bengali: যোগেন্দ্রনাথ মণ্ডল; 29 சனவரி 1904 – 5 அக்டோபர் 1968), புதிய பாகிஸ்தான் நாட்டின் முதல் சட்டம் & நீதித் துறை அமைச்சராக 15 ஆகஸ்டு 1947 முதல் 8 அக்டோபர் 1950 முடிய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். [1]பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்.[2] மேலும் காமன்வெல்த் & எல்லை விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றியவர். மேலும் பாகிஸ்தான் நாட்டின் பட்டியல் வகுப்பினரின் தலைவராகவும் இருந்தவர்.[3] ஜோகிந்திரநாத் மண்டல் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 1950-இல் பாகிஸ்தான் நாட்டில் வாழும் பட்டியல் வகுப்பு இந்துகளுக்கு எதிராக, பாகிஸ்தான் அரசின் பிற்போக்குத்தனமான செயல்பாடுகளைக் கண்டித்து, தனது பதவி விலகல் கடிதத்தை எழுதி வைத்து விட்டு பாகிஸ்தானிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் அடைந்தார். [4][5][6] [4] [5][6] இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் வாழ்ந்த ஜோகிந்தர்நாத் மண்டல் 1968-இல் மறைந்தார். இவர் நாமசூத்திரர் வகுப்பில் பிறந்தவர். மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜோகிந்திரநாத் மண்டல் |
Portal di Ensiklopedia Dunia