தமிழ் மரபுரிமைத் திங்கள்
கனடிய நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடும் தை மாதம் தமிழ் மரபுரிமைத் திங்கள் ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1] இந்த மாதத்தில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், வளர்க்கும் வண்ணம், பகிரும் வண்ணம் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படும். தமிழர் தமது நல்லணெண்ணத்தை, நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் இரத்தக் கொடை, தன்னார்வலர் தொண்டு போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுவர். கனேடிய தமிழ் பாரம்பரிய மாதத்திற்கு பாடல் மற்றும் கொடி உள்ளன. இப்பாடல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பாரம்பரிய மாதத்தில் பாடப்படுகிறது.[மேற்கோள் தேவை] நோக்கங்கள்தமிழ் மரபுரிமைத் திங்களின் நோக்கங்களாக பின்வருவன ஒழுங்கமைப்பளாளர்களால் முன்வைக்கப்படுகிறது:
வரலாறுதமிழர்கள் செறிந்து வாழும் நகரங்கள் ரொறன்ரோ, மார்க்கம், ஏசக்சு, பிரம்ரன், ஒசாவா, விற்பி, யோர்க் ஆகியவற்றின் மாநகர அவைகள் முதலில் தமிழ் மரபுரிமைத் திங்களை அங்கீகரித்தன. அடுத்து, ஒன்டாரியோ மாகாணத்தில் அறிவித்து தமிழ் பாரம்பரிய மாத சட்டத்தை (Tamil Heritage Month Act) நாடாளுமன்றத்தால் இயற்றியது.[2] வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia