ரொறன்ரோ தமிழியல் மாநாடு
ரொறன்ரோ தமிழியல் மாநாடு என்பது 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஆண்டு தோறும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிவியல் நடுவத்தினாலும் (Center for South Asian Studies) உலக நடப்புகளுக்கான மொங் பள்ளியாலும் (Monk School of Global Affirs) ஒழுங்கு செய்யப்படும் தமிழியல் மாநாடு ஆகும். பொதுவாக மூன்று நாட்கள் ஒரு மையக் கருவை முன்வைத்து மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் பெரும்பான்மைக் ஆய்வுக் கட்டுரைகளும் நிகழ்வுகளும் ஆங்கிலத்தில் அமைகின்றன. வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்னாசியா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழியல் புலமையாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்கிறது. மானுடவியல், தொல்லியல், புலம்பெயர் கல்வி, வரலாறு, மொழியியல், இலக்கியம், அரசியல், உளவியல், பொது நலம், சமயம், சமூகவியல், அரசறிவியல், அரங்கக் கல்வி ஆகிய பல துறைகளைச் சேர்ந்த 5பேராளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது வழமை. மாநாட்டின் இலக்குகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia