தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)
தவமாய் தவமிருந்து ஒரு குடும்ப உணர்வு சார்ந்த நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் 18 ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பானது.[1] இதில் பசங்க பட புகழ் சிவகுமார் மற்றும் அனிதா நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[2] இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 8 அக்டோபர் 2023 அன்று ஒளிபரப்பப்பட்டு, 474 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. கதைச் சுருக்கம்இந்த கதை ஒரு வயதான தம்பதியினரின் வாழ்க்கையை விவரிக்கிறது, அவர்கள் தங்கள் நான்கு குழந்தைகளுக்கு சிறந்ததை வழங்குகிறார்கள். இந்த நால்வவரும் வெவ்வேறு ஆளுமைகளைக் கொண்டுள்ளனர், இது அவர்களின் பெற்றோரை அவமானப்படுத்துகிறது. தங்கள் குழந்தைகளின் அடாவடித்தனமான அணுகுமுறையால் ஏமாற்றமடைந்த வயதான தம்பதிகள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்கிறார்கள். நடிகர்கள்
சிறப்பு தோற்றங்கள்நடிகர்களின் தேர்வுபசங்க படங்களின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட மார்கண்டேயன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள நடிகை அனிதா நாயர், மார்க்கண்டேயன் மனைவி சீதாவாக நடிக்கிறார். மகேஷ், பாண்டி கமல், விலாசினி, சந்தியா மற்றும் டீனு ஆகியோர் முக்கிய வேடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆரம்பத்தில் உமா வேடத்தில் ரேவதி இளங்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார், தொடர் படப்பிடிப்பின் போது, அவர் சில காரணங்களால் தொடரிலிருந்து விலகினார், பின்னர் தொடரின் எபிசோடுகள் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு அவருக்கு பதிலாக யாளினி ராஜன் நியமிக்கப்பட்டார். பிரிட்டோ மனோ பாண்டியாக நடிக்கிறார்.[6] மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia