தவளகிரி மண்டலம்![]() ![]() தவளகிரி மண்டலம் (Dhaulagiri Zone) (நேபாளி: धौलागिरी अञ्चलⓘ) தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ளது. இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் பாகலுங் நகரத்தில் உள்ளது. இம்மண்டலம் நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இம்மண்டலத்தில் 8,167 மீட்டர் உயரம் கொண்ட தவளகிரி கொடுமுடி சிறந்த சுற்றுலாத் தலமாகும். இந்துக்களில் புனித தலமான முக்திநாத் கோயில் இம்மண்டலத்தின் அமைந்துள்ளது. மலையேற்ற வீரர்களுக்கு முஸ்தாங் நகரம் சிறப்பிடமாக உள்ளது. நிர்வாகப் பகுதிகள்தவளகிரி மண்டலத்தின் மலைபாங்கான குன்றுப் பகுதிகளில் பாகலுங் மாவட்டம், மியாக்தி மற்றும் பர்பத் மாவட்டங்களும், இமயமலைப் பகுதிகளில் முஸ்தாங் மாவட்டமும் அமைந்துள்ளது. மக்கள் தொகையியல்2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தவளகிரி மண்டலத்தின் மொத்த மக்கள் தொகை 5,42,296 ஆகும். [1] இம்மண்டலத்தில் இந்து சமயம் மற்றும் பௌத்த சமயங்களை மக்கள் பின்பற்றுகின்றனர். புன், தாபா, ராணா, மகர், செத்திரி, பிராமணர், நேவார் மக்கள், குரூங் மற்றும் தகாளி இன மக்கள் வாழ்கின்றனர். இம்மண்டலத்தில் ஆப்பிள், மார்பா எனும் மதுபானம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. புவியியல் மற்றும் தட்ப வெப்பம்புவியியல்இம்மண்டலம் மலைபாங்கான குன்றுப் பகுதிகளையும், வடக்கே இமயமலை]]ப் பகுதிகளையும் கொண்டுள்ளது. தவளகிரி மண்டலத்தின் வடக்கில் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி எல்லையாக உள்ளது. தட்ப வெப்பம்இம்மண்டலம் கடல் மட்டத்திலிருந்து முன்னூறு மீட்டர் உயரம் முதல் 5,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள், டிரான்ஸ் இமயமலை காலநிலை என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. [2] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia