முஸ்தாங் மாவட்டம்![]() ![]() ![]() முஸ்தாங் மாவட்டம் (Mustang District) (நேபாளி: मुस्ताङ जिल्लाⓘ), தெற்காசியாவின் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 4-இல் அமைந்துள்ளது. முஸ்தாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜோம்சோம் நகரம் ஆகும். தவளகிரி மண்டலத்தில் அமைந்த முஸ்தாங் மாவட்டத்தின் பரப்பளவு 3,573 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முஸ்தாங் மாவட்ட மக்கள் தொகை 13,452 ஆக உள்ளது.[1]இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடாமான ஜோம்சோம் நகரத்தில் வானூர்தி நிலையம் உள்ளது. இமயமலையில் அமைந்த இம்மாவட்டம் வடக்கில் திபெத் மேட்டு நிலத்தைத் தொட்டுத்தொடா நிலையில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித தலமான முக்திநாத் கோவில் இம்மாவட்டத்தில் உள்ளது. மேலும் அன்னபூர்ணா கொடுமுடியும் இங்கு அமைந்துள்ளது. ஆப்பிள், மார்பா எனும் மதுபானம் இம்மாவட்டத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகம்![]() இம்மாவட்டத்தில் பதினாறு கிராம வளர்ச்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. புவியியல் மற்றும் தட்ப வெப்பம்இம்மாவட்டம், இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள், டிரான்ஸ் இமயமலை காலநிலை என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. [2]
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia