தானியேல் (நூல்)![]()
தானியேல் (Daniel) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.[Notes 1][Notes 2][Notes 3] பெயர்தானியேல் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் דָּנִיֵּאל, (Daniyyel, Dāniyyêl) என்னும் பெயர் கொண்டது. "கடவுள் என் நடுவர்" என்பது அதன் பொருள். தானியேல் என்பவர் இந்நூலின் மைய கதாபாத்திரம் ஆவார். உள்ளடக்கம்தானியேல் என்னும் இந்நூல் யூதர்கள் வேற்றினத்து மன்னனால் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டபோது எழுதப்பெற்றது. கொடுங்கோல் மன்னனை வீழ்த்தி இறைவன் தம் மக்களை மீண்டும் முன்னிருந்தவாறே சிறப்புறச் செய்வார் என்பதை வற்புறுத்துமாறு இந்நூலில் எடுத்துக்காட்டுகளும் காட்சிகளும் கையாளப்பட்டுள்ளன. இந்நூல் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பிரிவு 1: தானியேலும் அவருடைய தோழர்களும் கடவுள்மீது அசையாத நம்பிக்கை கொண்டு அவர்தம் கட்டளைகளுக்குப் பணிந்து நடந்ததால் தங்கள் எதிரிகளை மேற்கொண்டனர். இப்பகுதியில் காணப்படுபவை பாபிலோனிய, பாரசீகப் பேரரசுகளின் வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன. பிரிவு 2: தானியேல் கண்ட காட்சிகள் பாபிலோனியப் பேரரசு தொடங்கி அடுத்துவரும் எல்லாப் பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சுட்டிக்காட்டும் உருவகங்களாக அமைந்து, வேற்றினத்துக் கொடுங்கோலனின் வீழ்ச்சியையும் இறைமக்களின் வெற்றியையும் முன்னுரைக்கின்றன. நூல் அமைப்பில் பல மொழிகள்தானியேல் நூலின் ஒரு பகுதி எபிரேய மொழியிலும், மறு பகுதி அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. எபிரேய மொழிப் பகுதி:
அரமேய மொழிப் பகுதி:
மேலும், தானியேல் நூலின் நான்கு பகுதிகள் கிரேக்க மொழியில் மட்டும் காணப்படுகின்றன. அவை தானியேல்: இணைப்புகள் என்னும் இணைத்திருமுறை நூலில் இடம் பெற்றுள்ளன. நான்கு கிரேக்க இணைப்புகள்:
குறிப்பிடத்தக்க ஒரு சிறு பகுதிதானியேல் 2:19-23
உட்பிரிவுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia