மலாக்கி (நூல்)![]()
மலாக்கி (Malachi) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.[1][2][3] பெயர்மலாக்கி என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் מַלְאָכִי (Mal'akhi, Malʼāḵî) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Μαλαχίας (Malachias) என்றும் இலத்தீனில் Malachias என்றும் உள்ளது. இப்பெயருக்கு "கடவுளின் தூதுவன்" என்று பொருள். நூலாசிரியரும் நூல் எழுந்த காலமும்மலாக்கி நூலின் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. நெகேமியா இறைவாக்கினர் எருசலேமுக்கு வருவதற்கு முன் (கி.மு. 445) இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். எருசலேம் கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டதற்கு (கி.மு. 515) பின் இந்நூல் தோன்றியது என்றும் தெரிகிறது. எனவே, கி.மு. 500 அளவில் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். நூல் தரும் செய்திகுருக்களும் மக்களும் சமயக் கடமைகளில் தவறினர்; அவர்கள் ஆண்டவருக்குச் சேர வேண்டிய காணிக்கையை முறைப்படி செலுத்தவில்லை; அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, அவரை அவமதித்தனர்; அவரது திருப்பெயரைக் களங்கப்படுத்தினர். எனவே ஆண்டவர் தம் மக்களுக்குத் தண்டனை வழங்கவும் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் வருவார்; அவரது வருகைக்கு முன் அவரது வழியை ஆயத்தம் செய்யவும் அவரது உடன்படிக்கை பற்றி எடுத்துரைக்கவும் தம் தூதரை அனுப்புவார் என்பதே இந்நூலின் செய்தியாகும். மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று நாடு திரும்பினர் (கி.மு. 538). அவ்வமயம் அவர்களது வாழ்க்கை நிலை எவ்வாறிருந்தது என்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை வழிநடத்த வேண்டிய தலைவர்கள் குறித்து இந்நூல் கடுமையாகப் பேசுகிறது. நூல் எழுந்ததைத் தொடர்ந்து, ஆகாய், எஸ்ரா, நெகேமியா போன்ற இறைவாக்கினர் மக்களிடையே சீர்திருத்தம் கொணர்ந்தார்கள். மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க கடவுள் தாமே வருவார்; ஆண்டவர் வரும் நாளை முன்னறிவிப்பதுபோல அவருடைய தூதர் வருவார் என்று மலாக்கி நூல் கூறுவதை நற்செய்தி நூலாசிரியர்கள் இயேசுவுக்கும் அவருடைய வருகையை முன்னறிவித்த திருமுழுக்கு யோவானுக்கும் பொருத்தியுரைப்பார்கள். நூலிலிருந்து சில பகுதிகள்மலாக்கி 1:10-11
மலாக்கி 3:1
மலாக்கி 4:1-2
உட்பிரிவுகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia