குரு விருச்சிக ராசியில் கடக்கின்ற சமயத்தில், 12 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. [1] 144 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விழா அக்டோபர் 2018இல் கொண்டாடப்படுகிறது. [2][3] தாமிரபரணி ஆற்றின் இருகரைகளிலும் உள்ள 200 புஷ்கரணி படித்துறைகள் (தீர்த்தக்கட்டம்) சீர் செய்யப்பட்டு, பொதுமக்களின் தீர்த்தமாடலுக்காக ஆயத்தப்படுத்தப்பட்டன. [4] பொதிகை மலை தொடங்கி புன்னைக்காயல் வரை தாமிரபரணி ஆறு பாய்கின்ற 149 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 143 தீர்த்த கட்டங்களில் 64 தீர்த்த கட்டங்கள் மட்டுமே பக்தர்கள் நீராட ஏற்றதாக உள்ளன. அவ்வகையில் பல தீர்த்த கட்டங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. [5]
ஜடாயு தீர்த்தம்
ஜடாயு உயிர்நீத்த இடத்தில் ஜடாயு தீர்த்தம் தீர்த்தம் உள்ளது. 12 அக்டோபர் 2018 முதல் 22 அக்டோபர் 2018 வரை நடைபெறவுள்ள இவ்விழாவிற்காக, தாமிரபரணி நதியில் அமைத்து வழிபடப்படுவதற்காக இந்த தீர்த்தத்தில் புதிய படித்துறையும், தாமிரவருணி (தாமிரபரணி) அன்னை சிலையும் அகத்தியர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. [6][7]