திமீத்ரி மெத்வேதெவ்
திமீத்ரி அனத்தோலியெவிச் மெத்வேதெவ் (Dmitry Anatolyevich Medvedev, உருசியம்: Дми́трий Анато́льевич Медве́дев; பிறப்பு: 14 செப்டம்பர் 1965) உருசிய அரசியல்வாதி ஆவார். இவர் உருசியப் பாதுகாப்புப் பேரவையின் துணைத்தலைவராக உள்ளார். 2012 முதல் 2020 சனவரி 16 வரை இவர் உருசியத் த,லைமை அமைச்சராகவும்,[2][3][4] 2008 முதல் 2012 உருசிய அரசுத்தலைவராகவும் பதவி வகித்தார். 2020 சனவரி 15 இல் மெத்வேதெவ் அவரது அமைச்சரவையைக் கலைத்து விட்டு பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இவரது இடத்திற்கு மிகைல் மிசூசுத்தின் நியமிக்கப்பட்டார். அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் இவரை பாதுகாப்புப் பேரவையின் துணைத்தலைவராக நியமித்தார்.[5] இவருக்கு முன்னதாகவும் பின்னதாகவும் அரசுத்தலைவராக இருந்த விளாதிமிர் பூத்தினை விட மெத்வேதெவ் மிகவும் தாராளவாதியாக அறியப்பட்டவர். இவர் அரசுத்தலைவராக இருந்த காலத்தில் உருசியாவின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நவீனமயமாக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் மட்டும் நாட்டின் பொருளாதாரம் தங்கியிருப்பது குறைக்கப்பட்டது. இவரது பதவிக்காலத்தில், அணுவாயுதக் குறைப்புத் திட்டத்திற்கான உடன்பாடு ஐக்கிய அமெரிக்காவுக்கும் உருசியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது. உருசியாவுக்கும் சியார்சியாவுக்கும் இடையில் 2008 போரில் உருசியா வெற்றி கண்டது. உருசியா பெரும் பொருளியல் நிலைத் தேக்கத்தில் இருந்து மீண்டது. மெத்வேதெவ் கணிசமான சட்ட அமலாக்க சீர்திருத்தத்தைத் தொடங்கினார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தபோதிலும், ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். மெத்வேதெவ் உருசிய அரசின் எண்ணெய் நிறுவனமான காசபுரோமின் இயக்குநர் அவைத் தலைவராகவும் 2000-ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றியிருக்கிறார்.[6]. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia