பெங்கால் கெஜட்டில் திரிபுரா இராச்சியத்தின் வரைபடம், 1907உஜ்ஜயந்தா அரண்மனைநீர்மகால் அரண்மணைதிரிபுரா மகாராசா வீரச்சந்திர மாணிக்கிய மற்றும் இராணி மனமோகினிதிரிபுரா மகாராசா இராதா கிசோருடன் இரவீந்திரநாத் தாகூர், ஆண்டு 1900
திரிபுரா இராச்சியம் (Tripura State, also known as Hill Tipperah),[1] வடகிழக்கு இந்தியாவில், 1684-இல் மாணிக்கிய அரச மரபால் நிறுவப்பட்ட சுதந்திர திரிபுரா இராச்சியம் ஆகும். திரிபுரா இராச்சியத்தின் தலைநகரம் அகர்தலா ஆகும். அகர்தலாவில் இதன் தலைமை அலுவலகம் உஜ்ஜயந்தா அரண்மனையில் செயல்பட்டது.[2] தற்போது இந்த இராச்சியம் வடகிழக்கு இந்தியாவில் திரிபுரா மாநிலமாக உள்ளது.
வரலாறு
1684 முதல் வடகிழக்கு இந்தியாவில் மாணிக்கிய அரச மரபு மன்னர்களால் சுதந்திரமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது திரிபுரா இராச்சியம். திரிபுரா இராச்சியம் கி.பி. 14 மற்றும் 15-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் கிழக்கே வங்காளத்தின் முழுப்பகுதியையும், வடக்கிலும் மேற்கிலும் பிரம்மபுத்திரா நதிக்கரை வரையிலும், தெற்கே வங்காள விரிகுடா மற்றும் கிழக்கில் பர்மாவையும் எல்லைகளாகக் கொண்டு இருந்தது.
1941-இல் திரிபுரா இராச்சியம் 10,660 சதுர மைல் பரப்பளவும், 1463 கிராமங்களும், 5,13,000 மக்கள்தொகையும் கொண்டிருந்தது. இந்த இராச்சிய மக்கள் வங்காள மொழி மற்றும் காக்பரோக் மொழிகளை பேசினர்.
ஆட்சியாளர்கள்
இரண்டாம் இரத்தின மாணிக்கியா - 1684 – 1712
மகேந்திர மாணிக்கியா - 1712 – 1714
இரண்டாம் தர்ம மாணிக்கியா - 1714 – 1732 (முதல் முறை)
ஜெகத் மாணிக்கியா - 1732 – 1733
மூன்றாம் முகுந்த மாணிக்கியா - 1733 – 1737
இரண்டாம் ஜெய் மாணிக்கியா - (முதல் முறை) 1737 – 1739