திருநக்கரா மகாதேவர் கோயில், கோட்டயம்
திருநக்கரா மகாதேவர் கோயில் (Thirunakkara Sree Mahadevar Temple, Kottayam) என்பது கோட்டயம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது நடு கேரளாவில் மதிப்பிற்குரிய 108 சிவாலயங்களில் ஒன்றாகும். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் தேக்கம்கூர் மன்னரால் கட்டப்பட்டது. இக்கோயிலானது பல்வேறு இந்து தெய்வங்களின் தனிச்சிறப்பான சிற்பங்களையும் சுவரோவியங்களையும் கொண்டுள்ளது. இங்குள்ள சிவனை பரசுராமர் பிரதிட்டை செய்தார் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை ஆகும். தெக்கக்கூர் அரச குடும்பத்தினர் இங்குள்ள " திருநக்கர தேவரை " பரதேவதையாக (காவல் தெய்வம்) கருதினர் [1] விழாக்கள்இங்கு மூன்று திருவிழாக்கள் முதன்மையானவை ஆகும். அவை முறையே துலாம் (அக்டோபர் -நவம்பர்) மிதுனம் (சூன்-சூலை), மீனம் (மார்ச் - ஏப்பிரல்) ஆகியவை ஆகும். இவற்றில் மீனம் பிற இரண்டைவிட மிக முத்மையான விழாவாகும். இத்திருவிழாவின் கடைசி நாளன்று சாதி, சமய வேறுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ளும் கோட்டயத்தின் ஆராட்டுத் திருவிழா நடைபெறுகிறது. இவைகளுக்கு அடுத்து மார்ச் மாதத்தில் நடக்கும் பல்குண உற்சவமும் முக்கியமானது ஆகும். மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia