தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீசுவரர் கோயில்
சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் என்பது சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற ஒரு சிவாலயமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1] சிறப்புஇத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், தாயார் ஒப்பிலாநாயகி. மேலும் இத்தலத்தில் ஜாம்புவதடாகம் என்ற தீர்த்தமும், தலமரமாக கொன்றை மரமும் உள்ளன. முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்ததிற்கு ஜாம்புவதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது. தல புராணம்நாள்தோறும் சிவனடியார்களுக்கு உணவிட்டு பின் உணவருந்தும் வழக்கமுடைய தம்பதிகள் தீர்த்தனகிரி தலத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களை சோதிக்கும் பொருட்டு சிவபெருமான் சிவனடியார்களை அவர்கள் கண்களில் படாமல் இருக்கச் செய்தார். தளராமல் சிவனடியாரைத் தேடிய தம்பதியினருக்கு சிவபெருமானே முதியவராக சென்று அவர்கள் தோட்டத்தில் வேலையும் செய்து உணவருந்தினார். அவர் விதைத்த திணைப்பயிர்கள் அன்றே அறுவடைக்குத் தயாராக இருந்தைக் கண்டு தம்பதிகள் சிவபெருமானை அறிந்தனர். தலச் சிறப்பு
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் ஏர் மற்றும் நீர் இறைக்கும் இறைவன்; அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்: தீர்த்தனகிரி, கடலூர். பரணிடப்பட்டது 2021-06-12 at the வந்தவழி இயந்திரம் |
Portal di Ensiklopedia Dunia