பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடின் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.[1][2][3] சூரிய கிரணங்கள்சூரியன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சித்திரை மாதம் முதல் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு கருவறையிலிருக்கும் சிவலிங்கத்திருமேனியின் மீதும், சத்யாம்பிகை அம்பாள் மீதும் சூரியக் கதிர்கள் படுமாறு அமைக்கப்பட்ட சிறப்பான கட்டடக்கலைக் கொண்ட திருத்தலம். நேத்ரோதாரகேஸ்வர சுவாமிஇத்தலத்தின் மூலவர் பனங்காட்டீஸ்வரர், தாயார் சத்யாம்பிகை. கண் பார்வையைக் காப்பவர் என்ற பொருளில் இத்தல இறைவனார் ’நேத்ரோதாரகேஸ்வர சுவாமி’ என்ற திருப்பெயர் பெற்றுள்ளார். அரச குடும்பத் திருப்பணிகளும் பெயர்க்காரணமும்கல்வெட்டுகள் மூலம் இரண்டாம் ராஜேந்திர சோழ மன்னனின் (கி.பி 1052-1064) தேவியான பரவை நங்கை இத்தல இறைவனார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்ததால் ஏராளம் கொடையளித்தது தெரியவருகின்றது. இவரது பெயராலேயே ’பரவைபுரம்’ என்றழைக்கப்பட்டு பின்னர் பனையபுரம் என்றானது. தேசிய நெடுஞ்சாலைவிக்கிரவாண்டி-தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 45C விரிவாக்கப்பணிக்காக, 1300 ஆண்டு பழைமையான இத்திருக்கோயிலின் முக்கிய பகுதிகளை அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டனர். இதனை தடுத்திட ஊர் மக்கள், சிவனடியார்கள், அறநிலையத் துறை அலுவலர்கள், பத்திரிக்கை ஆசியர்களான ஏ. எம். இராஜகோபாலன், டி. எஸ். எஸ். சுப்பிரமணியன், தொல்லியல் அறிஞர் இரா. நாகசாமி, அரசியல் பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் உதவியுடன், இவ்வூரைச் சேர்ந்த எழுத்தாளர் பனையபுரம் அதியமான் எதிர்ப்பை பதிவு செய்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியர், மாவட்ட நில எடுப்பு அலுவலர் ஆகியோர் நில ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் பாதிக்கப்படாமல் மாற்று வழியை பரிந்துரைத்தனர். அமைவிடம்சென்னையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வரும்போது தே.நெ 45 (சென்னை-திருச்சி நெடுஞ்சாலை) சாலையில் இருந்து விழுப்புரம் செல்ல பிரியும் சாலையில்(தே.நெ 45 சி ) 1.1 கி.மீ தொலைவில் பனையபுரம் உள்ளது. இவற்றையும் பார்க்கஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia