துரிஞ்சிகுப்பம்
துரிஞ்சிகுப்பம் (Thurinjikuppam Village), தமிழ்நாட்டின் , திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட போளுர் வட்டத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நிர்வாகம்இந்த கிராமம் துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்குட்பட்டதாகும் . துரிஞ்சிகுப்பம் ஊராட்சியின் நிர்வாக தலைமையிடம் இங்கு அமைந்துள்ளது. மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது [1]. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 9 வார்டுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அவை:-
அமைவிடம்துரிஞ்சிகுப்பம் கிராமம், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் , துரிஞ்சிகுப்பம் ஊராட்சியில், சவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே ஆரணி நகரம் 22 கி.மீ தொலைவிலும், தெற்கே போளூர் 14 கி.மீ தொலைவிலும், மற்றும் வடக்கே கண்ணமங்கலம் 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மக்கள் தொகை2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2993 ஆகும். இவர்களில் பெண்கள் 1343 பேரும் ஆண்கள் 1404 பேரும் உள்ளனர். 2993 மக்கள்தொகை கொண்ட துரிஞ்சிகுப்பம் கிராமம், போளூர் வட்டத்தில் 36 வது அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாகும், இது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது. துரிஞ்சிகுப்பம் கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 7 கி.மீ. 2 ஆகும், இது துணை மாவட்டத்தின் பரப்பளவில் 26 வது பெரிய கிராமமாகும். கிராமத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கி.மீ. 2 க்கு 417 நபர்கள். இந்த ஊராட்சி, போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள்துரிஞ்சிகுப்பம் கிராமத்திலிருந்து சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனையும் காண்க
சான்றுகள்4. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
|
Portal di Ensiklopedia Dunia