கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் (ஆங்கிலம்: Kannamangalam), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ள ஒரு முதல்நிலைப் பேரூராட்சி ஆகும். இது ஆரணி (சட்டமன்றத் தொகுதிக்கும்) மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். அமைவிடம்திருவண்ணாமலையிலிருந்து 64 கி.மீ. தொலைவில் கண்ணமங்கலம் பேரூராட்சி அமைந்துள்ளது. இதன் கிழக்கே ஆரணி 19 கி.மீ.; மேற்கே ஜமுனாமரத்தூர் 50 கி.மீ.; வடக்கே வேலூர் 21 கி.மீ. மற்றும் ஆற்காடு 29 கி.மீ தொலைவிலும், தெற்கே போளூர் 32 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் மாநில நெடுஞ்சாலை, மங்களூரு - வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கண்ணமங்கலம் - ஆரணி மாநில நெடுஞ்சாலை மற்றும் கண்ணமங்கலம் - ஆற்காடு மாநில நெடுஞ்சாலை இணையும் இடத்தில் அமைந்துள்ள அழகிய நகரமாகும். பேரூராட்சியின் அமைப்பு4.80 ச.கி.மீ. பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆரணி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[2] சுற்றுலா
நிர்வாகம் மற்றும் அரசியல்இந்நகரம் தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. கண்ணமங்கலம் நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு நிலை பேரூராட்சியாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த நகரை கண்ணமங்கலம் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.
போக்குவரத்துசாலை வசதிகள்
பேருந்து வசதிகள்கடலூர், விழுப்புரம், செய்யாறு, சேத்துப்பட்டு, செஞ்சி, மேல்மலையனூர், வந்தவாசி, செங்கம், காஞ்சிபுரம், திண்டிவனம், சாத்தனுர் அணை, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சித்தூர், பேர்ணாம்பட்டு, மரக்காணம், உத்திரமேரூர், பெரணமல்லூர், மேல்மருவத்தூர், திருக்கோவிலூர் மற்றும் அருகிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகரப்பேருந்து வசதிகளும் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,696 வீடுகளும், 21,890 பேராக மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு வீதம் 83.68% அகும். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1038 பெண்கள் வீதம் ஆக அமைகிறது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia