நாகப்பட்டினம் இடைத்தேர்தல், 1979
1979 வாக்கில் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து இந்தியப் பொதுவுடைமை கட்சி விலகியிருந்தது.[3] இந்திய பொதுவுடைமை கட்சி வேட்பாளர் கே.முருகையனுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆதரவு தெரிவித்துள்ளன.[3] கொத்தடிமைத் தொழிலாளியான பொதுவுடைமைக் கட்சி வேட்பாளருக்கு அத்தொகுதியில் உள்ள தலித் சமூகங்களிலிருந்து பெரும் ஆதரவு இருந்தது.[3][6] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் மு. மகாலிங்கத்திற்குக் காங்கிரசு (ஐ) ஆதரவு தெரிவித்தது.[3] நாகப்பட்டினம் இடைத்தேர்தலுடன் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது.[7] தஞ்சாவூரில் காங்கிரசு (இந்திரா) வேட்பாளரை அதிமுக ஆதரித்தது. அதிமுக மேலிடப் பொறுப்பாளர் எம். ஜி. இராமச்சந்திரன் தேர்தல் பிரச்சாரத்தின் போது இரு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் [7] காங்கிரஸ் (இந்திரா) தலைவர் இந்திரா காந்தி தஞ்சாவூரில் மட்டுமே பிரச்சாரம் செய்தார்.[7] முடிவுகள்
ஆதாரங்கள்: [8] பின்விளைவுஇந்த இடைத்தேர்தல் வெற்றியினை இடதுசாரி மற்றும் மக்களாட்சி சக்திகளுக்குக் கிடைத்த வெற்றி என்று பொதுவுடைமைக் கட்சி கொண்டாடியது.[9] இருப்பினும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் மிகவும் எச்சரிக்கையான தொனியை எடுத்துக் கொண்டார். இடைத்தேர்தல் முடிவுகள் "தமிழகத்தில் எதேச்சதிகார சக்திகள் இன்னும் வலுவாக இருப்பதைக் காட்டுகிறது" என்று கூறினார்.[9] நாகப்பட்டினத்தில் எம். ஜி. இராமச்சந்திரன் கட்சி வேட்பாளரை போதுமான அளவு ஆதரிக்கவில்லை என்று பிரதேச காங்கிரசு குழு (இந்திரா) தலைவர் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டார்.[9] இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 1980 மக்களவை பொதுத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் திமுக வேட்பாளர் தஞ்சை மு. கருணாநிதியிடம் கே.முருகையன் தோல்வியடைந்தார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia