நாகவுர் கோட்டை

நாகவுர் கோட்டை (ஆங்கிலம்:Nagaur) கோட்டை இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாகவுர் மாவட்டத்தின் தலைமையிடமான நாகவுர் நகரத்தில் உள்ளது. நாகவுர் மாவட்டம், ஜோத்பூர் மற்றும் பிகானேர் மாவட்டங்களுக்கு இடையே உள்ளது.

வரலாறு

நாகவுர் கோட்டை இந்தியாவின் பண்டைய நாகவான்சி சத்திரியரால் கட்டப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை.[1] சத்திரிய ஆட்சியாளர்கள் நாகவுரில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தினர். நாகவுர் ஆட்சியாளர் சித்தோர்களின் சிசோடியாக்களுக்கு பலமுறை திரை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஜோத்பூரின் ரத்தோர்களால் அவர்களின் நிலங்கள் மெதுவாக இணைக்கப்பட்டன.

இடைக்கால சகாப்தத்தில், நாகவுர் நகரம் குஜராத் மற்றும் சிந்துவிற்கு வடக்கேயும், முல்தானில் இருந்து சிந்துவைக் கடக்கும் இடத்திற்கு மேற்கேயும் அமைந்தது. கோட்டையின் பாதுகாப்பு அதன் ஆட்சியாளர்களின் இராணுவ மற்றும் பொருளாதார சக்தியைப் பொறுத்தது. கசானவித்து வம்ச படையெடுப்புகளின் காலத்திலிருந்து நாகவுர் சக்திவாய்ந்த சவுகான் குலத்தின் கீழ் இருந்தது. இந்த ஆட்சியாளர்களின் தொடர்ச்சியானது 12 ஆம் நூற்றாண்டின் முடிவில் மூன்றாம் பிருத்விராஜ் சவுகான் ஆட்சிக்காலம் வரை இருந்தது. கியாசுத்தீன் பால்பன் சுல்தானாக மாறுவதற்கு முன்பு, இந்த பாலைவன நகரத்தை மையமாகக் கொண்ட பரந்த நிலப்பரப்பான நாகவுர் நகரம் படையெடுப்பாளர்களின் கீழ் வந்தது என்பது தெளிவாகிறது. ஆனால் அஜ்மீர் மற்றும் தில்லிக்கு இடையிலான பரந்த நிலங்களில் குட்டி இந்து தலைவர்கள் (ஏராளமான சாதிகளைச் சேர்ந்தவர்கள்) இருந்ததைப் போலவே, அஜ்மீருக்கும் நாகவுருக்கும் இடையிலான நிலங்களிலும் இதுபோன்ற நில உரிமையாளர்கள் இருந்தார்கள். முஸ்லிம்களுக்கு நில வருவாயை செலுத்தி அவர்களின் இராணுவத்தில் சேரலாம்.

அஜ்மீருக்கும் நாகவுருக்கும் இடையிலான மற்றொரு ஒற்றுமை, ஆரம்பத்தில் இரு இடங்களிலும் சூபி ஆலயங்களை நிறுவியது. நாகவுருக்கு வந்த ஆரம்பகால சூபிக்களில் ஒருவர் சுல்தான் தர்கின். இவரது சன்னதி இந்து ஆட்சியின் போது நிறுவப்பட்டது. குவாஜா மொய்னுதீன் அஜ்மீரில் சிஷ்டி சூபி ஒழுங்கை நிறுவிய பின்னர் அவரது சீடர்களில் ஒருவரான அமீதுதீன் நாகவுருக்கு வந்தார். அமீதுதீன் தனது போதனைகளில் சில இந்து கொள்கைகளுக்கு இடமளித்தார். அவர் சைவ உணவு உண்பவராக மாறி, தனது சன்னதியில் ஒரு பசுவை அன்பாக வளர்த்தார்.

1306 ஆம் ஆண்டில் மங்கோலிய இராணுவம் கோகர்களுடன் சேர்ந்து நாகவுரை அழித்தது. கல்ஜி துருக்கியர்களின் நிலங்களை சுதந்திர ராசபுத்திர ஆட்சியாளர்கள் கைப்பற்றத் தொடங்கினர். இந்த விரிவாக்கத்தின் மத்தியில் அவர்கள் ஜெய்சல்மர், சித்தோர் மற்றும் சிவானா போன்ற முக்கியமான ராசபுத்திர கோட்டைகளை இழந்தனர். அதே நேரத்தில் கொரில்லா யுத்தம் மார்வார் மற்றும் மேவார் பகுதிகளை கைப்பற்றுவதை முஸ்லிம் படைகளுக்கு அசாத்தியமாக்கியது. 1351 இல் தில்லி சுல்தானகம் உடைந்த பின்னர் வேறு சில கோட்டைகளும் நகரங்களும் ராசபுத்திரர்களிடம் இழந்தன. 1388 இல் பிரூஸ் துக்ளக் இறந்தவுடன், மீதமுள்ள கோட்டைகளான அஜ்மீர் மற்றும் நாகவுர் ஆகியவை தங்கள் சொந்த பரம்பரை ஆளுநர்களின் கீழ் வந்தன. துருக்கி தண்டானி பழங்குடியினர்கள் சுல்தான்களாக மாறினர். நாகவுர் சுல்தான்கள் வர்த்தகம், விவசாயம் மற்றும் கால்நடைகள், ஆடுகள் மற்றும் ஒட்டகங்களின் பரந்த மந்தைகளிலிருந்து மக்கள் சம்பாதித்த பணத்திற்கு வரிவிதித்தனர். கூடுதலாக, டெல்லி சுல்தானகத்தைப் போலவே, ஜாசியா வரியும் மற்றும் இந்துக்களிடமிருந்து எடுக்கப்பட்ட ஒரு யாத்திரை வரியும் கருவூலத்திற்கு கணிசமான தொகையை கொண்டு வந்தது. அதன்மூலம் தண்டானி துருக்கியர்கள் தங்கள் அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபட உதவியது.

குறிப்புகள்

  1. "Archived copy". Archived from the original on 3 December 2007. Retrieved 2008-01-10.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya