ஜெய்சல்மேர்
பெயரின் மூலம்ஜெய்சால்மருக்கு அதன் நிறுவனர் ராவ் ஜெய்சால்[1] நினைவாக அப்பெயரிடப்பட்டது (வரலாறு பிரிவை பார்க்க). "ஜெய்சல்மேர்" என்பதற்கு "ஜெய்சாலின் மலைக் கோட்டை" என்று பொருள். மஞ்சள் நிறமான மணல்களின் மூலம் மஞ்சள் நிறம் கலந்த-பொன்னிற சாயங்களை நகரத்திற்கும் மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களுக்கு வழங்குவதால் ஜெய்சல்மேர் சில நேரங்களில் "இந்தியாவின் தங்க நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. வரலாறுபாட்டி ராஜ்புட் இனத்தை சேர்ந்தவர்கள், பாட்டி என்ற முன்னோர்களின் பெயர்களிலிருந்து தங்கள் பெயரை எடுத்துக் கொண்டவர்கள், பஞ்சாப்பில் பழங்குடியினராக இருந்த போது போர் வீரர்களாக புகழ் பெற்றவர்கள் ஆகியோர் பெரும்பாலும் ஜெய்சால்மரில் வசித்தனர். பிறகு இந்தக் குழுவானது தெற்கு நோக்கி பயணித்து இந்திய பாலைவனங்களில் அடைக்கலம் புகுந்தது. அன்று முதல் அந்த பாலைவனங்கள் அவர்களின் வாழிடமானது. இந்த பகுதியானது குர்ஜார்-ப்ராதிஹாரா பேரரசின் ஒரு பகுதியாகவும் மற்றும் 11 ஆம் நூற்றாண்டு வரை பர்குஜார் என்ற அரசனால் ஆட்சி செய்யப்பட்டது. பாட்டி குடும்பத்தின் புகழ்பெற்ற இளவரசன் டியோராஜ், ஜெய்சல்மேர் வம்சத்தின் உண்மையான நிறுவனராக மதிக்கப்பட்டார் இவருடன் ராவல் பெயரும் தொடங்கப்பட்டது. 1156 ஆம் ஆண்டு டியோராஜ்லிருந்து ஆறாவது பின்னவரான ராவல் ஜெய்சால்[1], கோட்டை மற்றும் ஜெய்சல்மேர் நகரத்தை நிறுவினார். அவர் தனது பழைய தலைநகரமான லோத்ருவாவை நீக்கி விட்டு ஜெய்சால்மரை புதிய தலைநகரமாக உருவாக்கினார் (லோத்ருவா, ஜெய்சால்மரிலிருந்து 15 கி.மீ. வட-மேற்கு திசையில் உள்ளது). 1293 ஆம் ஆண்டு பேரரசர் அலா-உத்-தின் கில்ஜியை பாட்டிகள் கோபமூட்டி அவரது படைகள் ஜெய்சாலமர் நகரம் மற்றும் கோட்டையை கைப்பற்ற காரணமாயினர். இதனால் சில நாட்களுக்கு இந்த இடம் தனித்து விடப்பட்டது. தற்போது நன்கான சாஹிப் மாவட்டம் என்று அறியப்படும் தால்வாண்டிக்கு சில பாட்டிகள் இடம் பெயர்ந்தனர். நன்கான சாஹிப் (பஞ்சாப், பாகிஸ்தான்) மற்றும் மற்றவர்கள் பூட்டோ என்ற பெயருடன் லார்கானாவாக (சிந், பாகிஸ்தான்) குடியேறினர். நன்கான சாஹிப்பில், பாட்டி குழுக்கள் ராய் ஃபோகி மற்றும் ராய் புளர் பாட்டி வயதுவரிசையில் வந்தவர்களாக இருக்கலாம். இதற்கு பிறகு ராவல் சாஹல் சிங் காலம் வரை எதையும் பதிவு செய்ய இயலவில்லை. இவரது ஆட்சி காலத்தில் பாட்டிகளின் வரலாற்றில் புதிய சகாப்தம் ஏற்பட்டதாக முகலாயப் பேரரசர் சாஜஹான் தனது மேலாத்திக்கத்தில் இருந்த போது ஒப்புக் கொண்டார். ஜெய்சால்மரின் இளவரசர்கள் அக்கால கட்டத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டனர். ஆனால் அந்த காலம் முதல் 1762 ஆம் ஆண்டு ராவல் முல்ராஜை வாரிசாக ஏற்கும் வரை மாநிலத்தின் செல்வமானது சரிந்து, பெரும்பாலான அதிகாரவரம்புகளை இழந்தது. 1818 ஆம் ஆண்டில் முல்ராஜ் பிரிட்டிஷுடன் அரசியல் கூட்டில் இணைந்தார். 1887 ஆம் ஆண்டு பிறந்த மஹரவால் சலிவாஹன் 1891 ஆண்டு நாட்டுத்தலைமை மீது நாட்டம் கொண்டார். பாட்டி ராஜ்புட் குழுவின் ஆட்சியாளரான ஜெய்த்சிம்ஹாவை ஜெய்சல்மேர் மஹாராஜாக்களின் வம்சாவழியினர் தொடர்ந்தனர். ஜோத்புர் மற்றும் பிக்னீரை சேர்ந்த சக்திவாய்ந்த ரத்தோர் குழுக்கள் பாட்டி ராஜ்புட்டி இனத்தவரின் முக்கியமான எதிரிகளாக இருந்தார்கள். கோட்டைகள், குட்டைகள் அல்லது கால்நடைகள் போன்ற உடைமைப் பொருள்களுக்காக அவர்கள் போரிட்டுக் கொண்டனர். ஒட்டக சவாரி செய்யும் இந்தியர் மற்றும் ஆசிய வியாபாரிகள் பயணம் செய்த பாரம்பரிய வணிக வழியில் பயணம் செய்யும் நிறுத்தமாக ஜெய்சல்மேர் அமைந்திருந்தது. இந்த வழியானது இந்தியா மற்றும் மத்திய ஆசியா, எகிப்து, அரபியா, பெரிசியா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்குப் பகுதிகள் ஆகிய பகுதிகளை இணைத்தது. இடைக்காலம்![]() இந்தியாவில் இசுலாமியப் படையெடுப்பு இருந்த காலகட்டத்தில் பாலைவனப் பகுதிகளின் புவியியல் சூழலின் காரணமாக ஜெய்சல்மேர் இசுலாமியர் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பியது. ஜெய்சால்மரின் ராவல்கள் டெல்லி சுல்தான்களுக்கு ஆண்டுக் கப்பம் கட்டுவதாக ஒப்புக் கொண்டனர். அலாவுதின் கில்ஜி ஆட்சிகாலத்தில் முதல் ஜெய்சல்மேர் முற்றுகை நடந்தது. பாட்டிகள் புதையல் நிறைந்த ஒட்டகவழி சவாரி செய்வதாக தூண்டப்பட்டது. உள்ளூர் நாட்டுக் கதைப்பாடல்களை பொருத்த வரையில் பாட்டிகள் ஏழு ஆண்டுகள் வரை அதாவது எதிரி நாட்டு போர் படைகள் மதில்களை நெருங்கும் வரை கோட்டையை தற்காத்ததாகக் கூறப்படுகிறது. ஜாகுர் சடங்கில் பாட்டிகள் தோல்வியை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டது. பிறகு அஜ்மரில் உள்ள அனசாகர் ஏரிக்கு அருகில் ஜெய்சால்மரின் ஆட்சியாளர்கள் கூடாரம் அமைந்திருந்த போது சுல்தான் ஃபெரோஸ்கானால் முற்றுகையிடப்பட்டனர். இந்த முற்றுகை மற்றொரு ஜாகுருக்கு வழிவகுத்தது. இந்த தாக்குதலின் போது ஜெய்ட்சிம்ஹாவின் மகன் துதா மாண்டார். துதாவின் சந்ததிகள் ஜெய்சாலமரை இரண்டு நூற்றாண்டுகள் வரை ஆட்சி செய்தனர். துதாவின் சந்ததிகளான லுனாகர்னா பிறகு ஜெய்சல்மேர் வழியாக அஜ்மிருக்கு செல்லும் போது ஹுமயனுடன் சண்டையிட்டார். முகலாய மன்னர் அக்பர், ஜெய்சல்மேர் இளவரசி ஒருவரை திருமணம் செய்தார். மேன்மை பொருந்திய சபாலா சிம்ஹா என்பவரால் ஜெய்சல்மேர் ஆட்சி செய்யப்பட்டது. பெசாவர் இயக்கத்தின் போது செய்த பணிகளுக்காக அவர் முகலாய மன்னன் ஷாஜஹானின் ஆதரவைப் பெற்றார். இளவரசுக்குரிய ஜெய்சல்மேர்![]() பிரிட்டிஷுடன் உடன்பாடு செய்யப்பட்ட கடைசி மாநிலங்களில் ஜெய்சால்மரும் ஒன்று. பிரித்தானிய ஆட்சியின் போது பாட்டி குழுக்களின் ராஜ்புட்களால் ஆட்சி செய்யப்பட்ட ஜெய்சால்மரானது பிரின்சிலி மாநிலம் என்ற அதே பெயருடன் இருந்தது. தற்போதைய சந்ததி பிரிஜிராஜ் சிங் ஆகும். இந்திய அரசாங்கத்தின் கீழ் இந்த நகரம் இருந்தாலும் பிரிஜிராஜ் சிங் மற்றும் குடும்பத்தினர் பல நற்செயல்களை செய்து வருகின்றனர். இந்த அரச குடும்பம் தற்போதும் மக்களிடம் மிகுந்த மரியாதை பெற்றுள்ளது.[மேற்கோள் தேவை] சம்பிரதாயப்படி ஒட்டக சவாரி செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் முக்கியமான வருமானமாக உள்ளது. பாராம்பரியமான பாதை வழிகளிலிருந்து கடல் வழி மார்க்கம் மற்றும் துறைமுகமாக பம்பாய் மாறியதால் ஜெய்சால்மரின் புகழ் மறையத் தொடங்கியது. 1947 ஆம் ஆண்டில் இந்தியாவை பிரித்தபோது இந்தோ-பாக் எல்லையில் உள்ள அனைத்து வணிகப் பாதைகளையும் அடைத்த போது ஜெய்சல்மேர் சர்வதேச எல்லையாக தண்ணீர் இல்லாத வறட்சி பாலைவனமாக மாறியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்ட போது ஜெய்சால்மருக்கு இராணுவ பொருட்களை பாதுகாத்து வழங்கும் இடமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிறகு இராஜஸ்தான் கால்வாயை சுற்றியுள்ள பாலைவன இடங்களை மீட்டெடுக்க இது உதவியது. சாலைகள் மற்றும் இரயில் பாதைகளும் அமைக்கப்பட்டு இதுவரை இராஜஸ்தானில் உள்ள மற்ற நகரங்களை இது இணைக்கிறது. இதன் பிறகு இராஜஸ்தான் அரசு ஜெய்சால்மரை சுற்றுலாத் தலமாக மாற்றியது. புவியியல்
ஜெய்சல்மேர் கடல் மட்டத்தில் இருந்து 229 மீட்டர் (750 அடி) உயரத்தில் உள்ளது. இது மேற்கு இராஜஸ்தானில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை அருகே 5.1 கி.மீ. பரப்புகளை கொண்டு அமைந்துள்ளது. இங்கு கோடைகால வெப்பநிலையின் உச்ச அளவு 41.6 °C (106.9 °F) குறைந்த அளவு 25 °C (77 °F) ஆகும். குளிர்கால வெப்பநிலையின் உச்ச அளவு எப்போதும் 23.6 °C (74.5 °F) மற்றும் குறைந்த அளவு 7.9 °C (46.2 °F) ஆகும். சராசரி மழையளவு 150 மில்லிமீட்டர்கள் (5.9 அங்) ஆகும்.[2] ஜெய்சல்மேர் எப்போதும் மணல் பரப்பு நிறைந்தது. இது இந்தியாவின் சிறந்த பாலைவனங்களை உருவாக்கும் பகுதியாகும். அனைத்து வடிவங்கள் மற்றும் அளவுகளில் உள்ள முடிவில்லாத மணல் மலைகளின் கடல்கள் இந்த இடங்களின் பொதுவான அமைப்புகளாகும். சில மணல் பரப்புகள் 150 அடிகள் (46 m) உயரங்களுக்கு நீளும். வடக்கு பகுதிகள் மரப் புதர்களாலும், கிழக்கு பகுதிகள் பெரிய புல்களின் கொத்துகளாலும் சூழப்பட்டுள்ளது. தண்ணீர் அரிதாகவும், உப்புத்தன்மை உள்ளதாகவும் உள்ளது; கிணறுகளின் சராசரி ஆழம் 250 அடிகள் (76 m) இருக்கும். வற்றாத ஓடைகள் ஏதும் இல்லை, ஒரே ஒரு சிறிய ஆறு காக்னி மட்டும் 28 மீட்டர்கள் (92 அடி) நீளத்தில் உள்ளது. நீளமான தளத்தில் பரந்து விரிந்து ஓர்ஜ்கில் ஏரியை உருவாக்குகிறது ("புஜ்-ஜில்"). வறண்ட மற்றும் நல்ல காலநிலை இருக்கும். கம்பு, கோளம், மோட்டிஃப், டில் மேலும் பல மழைதாவரங்கள் ஜெய்சல்மேர் முழுவதும் வளர்கின்றன. இளவேனில் பருவ தாவரங்களான கோதுமை, பார்லிபோன்றவை அரிதாக உள்ளன. மிகக்குறைவான மழைப் பொழிவால் நீர்பாசனம் பெரும்பாலும் அறியாத நிலையில் உள்ளது. தொலைவுகள் : ஜெய்பூர் (558 கி.மீ.), அகமதாபாத் (626 கி.மீ.), ஆக்ரா (802 கி.மீ.), புதுடெல்லி (864 கி.மீ.), பம்பாய் (1177 கி.மீ.). பொருளாதாரம்![]() ஜெய்சால்மரில் சுற்றுலா முக்கியமான துறையாக உள்ளது. இந்திய அரசாங்கம் 1955–56 ஆம் ஆண்டுகளில் எண்ணெய் தேடும் துறைகளை ஜெய்சல்மேர் பகுதிகளில் துவங்கியது.[3] 1988 ஆம் ஆண்டில் ஜெய்சால்மரின் ஆழமில்லாத பகுதிகளில் இந்திய எண்ணெய் நிறுவனம் இயற்கை எரிவாயுவை கண்டுபிடித்தது.[4] ஜெய்சல்மேர் பகுதியிலிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு இசையமைப்பாளர்கள் மற்றும் நடனக்காரர்கள் முக்கிய கலாச்சார ஏற்றுமதியாகச் செல்கின்றனர். மன்கனையார் இசையமைப்பாளர்கள் உலகம் முழுவதும் நிகழ்ச்சிகள் செய்துள்ளனர் மற்றும் பாலைவன நடன அழகி ஹாரிஸ் அரசி[5] உலகம் முழுவதும் சுற்றுலா சென்று நிகழ்ச்சிகள் செய்துள்ளார் மற்றும் சர்வேத திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த இடங்களுக்கே சொந்தமான ஒட்டங்களிலிருந்து தோலினால் உருவாக்கப்படும் கொண்டு செல்லும் பைகள் மூலம் ஜெய்சல்மேர் மிகவும் பிரபலமாக உள்ளது. போக்குவரத்து![]() இந்திய இரயில்வேயின் கிளை இரயில்வே முனையாக ஜோத்பூரை இணைக்கும் அகலப்பாதை நிலையமாக ஜெய்சல்மேர் உள்ளது. "பேளஸ் ஆன் வீல்ஸ்" என்ற இரயில் ஜெய்சல்மேர் நிறுத்ததில் நின்று செல்கிறது. மக்கள் தொகை விவரங்கள்2001 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகைக்கணக்கெடுப்பின் படி[6] ஜெய்சல்மரின் [மக்கள் தொகை] 58,286 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 57% மற்றும் பெண்கள் 43% உள்ளனர். ஜெய்சால்மரின் சராசரி எழுத்தறிவு விகிதம் 64% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகம். இங்கு ஆண் எழுத்தறிவு விகிதம் 73%, பெண்கள் எழுத்தறிவு விகிதம் 50% ஆகும். ஜெய்சால்மரின் மக்கள்தொகையில் 16% பேர் ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆவர். கால்நடைக் கூட்டங்களை மேய்க்கும் நிலையற்ற வாழ்க்கைக்கு மக்கள் தொகைப் பெருக்கத்தின் பகுதிகள் வழிவகுக்கிறது. ஒட்டகங்களின் கூட்டங்கள், மாடுகள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடு போன்றவைகள் இங்கு அதிகமாக உள்ளன. இங்கு முதன்மை வியாபாரபாக கம்பளி, நெய், ஒட்டகங்கள், கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடு போன்றவை இருக்கின்றன. தானியங்கள், சர்க்கரை, அயல்நாட்டு துணி, பொருட்களின் பாகங்கள் போன்றவை முதன்மையான இறக்குமதிகள் ஆகும். அதிகப்படியான செலவுகளினால் 1897, 1900 மற்றும் பல ஆண்டுகளில் இது பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டது. சுற்றுலாஜெய்சல்மேர் வெகு தூரத்தில் இருந்தாலும் உள்ளூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னங்கள் மற்றும் கலையாற்றல் கட்டமைப்புகள் அதிக அளவு உள்ளன. வரலாற்று கோட்டைகள் மற்றும் நகரியங்கள் ஜெய்சல்மாரை புகழ் பெற்ற சுற்றுலா மையமாக மாற்றியுள்ளது. சுற்றியுள்ள தனித்துவிடப்பட்ட இயற்கைக்காட்சிகள் அழகிற்கு சாட்சியாகும். சுற்றியுள்ள பாலைவன இடங்களுக்கு ஒட்டகப் பயணம் செல்வது சுற்றுலா வாசிகளுக்கு பிரபலமானதாகும்; வியாபாரத்தில் போட்டி கடுமையானதாகும். இந்த நகரம் மற்றும் சுற்றியுள்ள பாலைவனங்களை சுற்றுவதற்கு செலவிடும் சில நாட்கள் கலவரம் நிறைந்த இந்தியாவின் மற்ற நகரங்களிலிருந்து விடுபட சிறந்த வழியாகும். காணத்தகுந்த இடங்கள்ஜெய்சல்மேர் கோட்டை![]() 1156 ஆம் ஆண்டு பாட்டி ராஜ்புட் அரசர் ஜெய்சால் அவர்களால் கட்டப்பட்ட ஜெய்சல்மேர் கோட்டை திரிகுட்டா மலையில் அமையப்பட்டு பல போர்களில் காட்சியாக உள்ளது. பகல் நேரங்களில் சிங்கத்தின் பழுப்பு நிறத்தில் இருக்கும் பெரிய மணற்கல் சுவர்கள், சூரியன் மறையும் போது மயக்கத்தக்க தேன்-தங்க நிறத்தில் மாறும். இந்த கோட்டையை மையமாக கொண்டு பிரபல இந்திய திரைப்பட இயக்குநர் சத்தியஜித் ராய் எழுதிய திகில் நாவல் சோனார் கெல்லா ( தி கோலடன் போர்ட்ரஸ்) பிறகு திரைப்படமாக மாறியது. இது மக்கள் வாழும் கோட்டை ஆகும். நகரத்தின் கால்பகுதி மக்கள் இன்றும் கோட்டையின் உள்ளே வாழ்கிறார்கள். ராஜ் மஹால் (ராயல் அரண்மனை), ஜெயின் கோவில்கள் மற்றும் லக்ஷ்மிநாத் கோவில் போன்றவை கோட்டையின் உள்புறம் உள்ள முக்கியமான ஈர்ப்புகளாகும். மாளிகைகள்ஜெய்சால்மரில் உள்ள முக்கியமான மாளிகைகள்:
ஸ்ரீ நாத் ஜெய்சல்மேர் கோட்டை : ஜெய்சால்மரில் உள்ள பாரம்பரிய விடுதி. ஜெய்சல்மேர் தங்க கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ நாத் அரண்மனை பழைய இராஜஸ்தான் மாளிகைகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஜெய்சால்மரின் ஜெயின் பாரம்பரியம்ஜெய்சல்மேர் நகரானது சமணர் இனத்தவர்களால் ஜெயின் கோவில்கள் மூலம் அழகாக செறிவூட்டப்பட்டிருந்தது 16 வது தீர்த்தங்கரர் சாந்திநாதர் மற்றும் 23வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் போன்றவர்களுக்கு கோவில்களை அர்ப்பணித்தனர். ஜெயின் பாரம்பரியத்தில் செய்யப்பட்ட தொல்பொருள்கள் மற்றும் அரிய சுவடிகளை கொண்ட இந்தியாவின் மிகப் பழமையான நூலகங்களை ஜெய்சல்மேர் பெற்றுள்ளது. லோதர்வா, அமர்சாகர், பரமஅம்சர் மற்றும் பொக்ரான் போன்ற ஜெயின் புனித நிலையங்கள் ஜெய்சால்மரை சுற்றி உள்ளன. அருங்காட்சியகங்கள்
மற்றவை
அருகில் இருக்கும் இடங்கள்
பாலைவனத் திருவிழாஒவ்வொரு ஆண்டும் ஜனவரி/பிப்ரவரியில் மூன்று நாட்கள் நடைபெற்று முடிந்து விடும். ஜெய்சால்மருக்கு வருகை தர இது தான் சிறந்த தருணம். இங்கு கல்பீலியா நடனங்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை காணலாம். காட்சிக்கூடம்
கூடுதல் வாசிப்பு
குறிப்புதவிகள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia