நீலகண்ட தாசு
நீலகாந்த தாசு ( Nilakantha Das) (பிறப்பு: 1884 ஆகஸ்ட் 5 - இறப்பு:1967 நவம்பர் 6) [1] பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில், பூரி மாவட்டத்தின் சிறீ இராம்சந்திரபூர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் ஓர் சொற்பொழிவாளரும், அரசியல்வாதியும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியுமாவார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மூலம் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார். இவர் பிரித்தானிய இராச்சியத்தில் ஒரு இலாபகரமான பணியை மறுத்தார். சத்தியாபதி உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். [2] இவரது உரைகளின் மூலம் தீண்டாமை மற்றும் பிற சமூக தீமைகளுக்கு எதிராக போராட இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தினார். 1951 ஆம் ஆண்டில், தாசு ஒடிசா சட்டமன்றத்தில் சுவாதின் சனசங்கம் என்ற புதிய அரசியல் கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] 1955 ஆம் ஆண்டில், ஜவகர்லால் நேருவின் வேண்டுகோளின் பேரில் அவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1957 இல் மீண்டும் அந்த கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தாசு 1960 இல் பத்ம பூசண் விருது பெற்றார். [4] இவர் 1967 நவம்பர் 6 அன்று இறந்தார். [5] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia