பஞ்சாபி சையிக் (இனக்குழு)
பஞ்சாபி சையிக் (Punjabi Shaikh) அல்லது பஞ்சாபி ஷேக்குகள் (Urdu: پنجابی شيخ) தெற்காசியாவின் சையிக்குகளில் புகழ்மிக்க கிளைப் பிரிவினர் ஆவர். பெயர்ஷேக் (அரபு மற்றும் பாரசீகம்: شيخ ), என்ற அரபுச் சொல்லுக்கு இனத்தின் மூத்தவர், தலைவர், கௌரவமான மதிப்பிற்குரிய முதிர்ந்தவர், இஸ்லாமிய அறிஞர் என பொருள்படும். தெற்காசியாவில் பெரும்பாலும் இச்சொல் பொதுவாக முஸ்லீம் வர்த்தக குடும்பங்களின் ஒரு இன தலைப்பு பட்டமாக பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம் ஆட்சி தெற்காசியாவில் துவங்கிய கி.பி 713 முதலே, முஸ்லீம் தொழில்நுட்பவல்லுனர்கள், அதிகாரகள், படைவீரர்கள், வணிகர்கள், கட்டடக்கலைஞர்கள், ஆசிரியர்கள், அறிவியலாளர்கள், இறையியலாளர்கள், சூபிகள் போன்றோர் முஸ்லீம் நாடுகளில் இருந்து தெற்காசியாவில் உள்ள இஸ்லாமிய சுல்தான்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில்வந்து நிரந்தரமாக குடியேறினார்கள். தெற்காசியாவில் இஸ்லாமியர்களின் வருகைக்குப்பின் பஞ்சாப் பகுதியின் சில உயர் சாதியினர் (பிராமணர் மற்றும் கத்ரிகள்) இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டனர், இவர்கள் இப்பட்டத்தை ஏற்றனர். இவர்களே பஞ்சாபி ஷேக்குகள் (பஞ்சாபி) پنجابی شيخ. என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயிகளாக அல்லாமல் நகர்புறங்களில் வாழ்பவர்களாக உள்ளனர். ஆனால் மேற்கு மாவட்டங்களில் உள்ள சிலர் தங்கள் சொந்த நிலங்களில் வேளாண்மை செய்பவர்களாகவும் உள்ளனர். இவர்கள் முதன்மையாக வணிகம் செய்பவர்களாக உள்ளனர். பஞ்சாபில் இவர்களின் வியாபார புத்திசாலித்தனத்தால் மரியாதை உள்ளவர்களாக உள்ளனர். 12 ஆம் நூற்றாண்டில் பல இராசபுத்திர இனத்தினர் இஸ்லாத்துக்கு மதம் மாறியபோது இவர்களுக்கும் மதிப்புமிக்க ஷேக் (இனக்குழுவில் மூத்தவர்) பட்டம் அரபு ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டது. ஷேக் ராஜ்புத் எனப்படுபவர்கள் துவக்கத்தில் இஸ்லாத்துக்கு மாறிய இராஜபுத்திரர்கள் ஆவர். பிற எடுத்துக்காட்டுகள் காவாஜா ஷேக், இவர்களின் துணைபிரிவுகளாக சின்னியோடிஸ் மற்றும் குவாங்கோ ஷேக் ஆகிய இரு சமூகங்கள் ஆகும். பாக்கித்தான் விடுதலையடைந்த 1947 க்கு முன், கத்ரிகள் பஞ்சாபின் அனைத்து மாவட்டங்களிலும் வாழ்ந்துவந்தனர். பின்னர் அவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்தனர். அனைத்து சாதிகளில் இருந்தும் இஸ்லாத்துக்கு மதமாற்றங்கள் நடந்தன அதாவது; கத்ரிகள், இராசபுத்திரர்கள், குஜ்ஜார்கள், காகர்கள், போன்ற சாதியினர் இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டனர் இவர்களின் சந்ததியினர்தான் சிந்தி ஷேக், குரேஷி ஷேக், அப்பாசி சமூகத்தினர் ஆவர். இவர்களில் பஞ்சாபி பேசும் ஷேக்குகள் பஞ்சாப் பகுதிகளிலும், சிந்தி ஷேக்குகள் சிந்து பகுதியிலும் இந்தியாவில் கணிசமான அளவில் உத்திர பிரதேசம், அரியானாவிலும் குறைந்த எண்ணிக்கையில் பீகார், மேற்குவங்கம் ஐதராபாத் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றனர். சரஸ்வத் பிராமணர்கள், மோஹயல்யாக்கள் ஆகிய உயர்சாதியினர் இஸ்லாத்துக்கு மாறியபோதும் ஷேக் பட்டத்தை சூட்டிக்கொண்டனர். இஸ்லாமியத்தை அணைத்துக்கொண்ட அனைத்து முஸ்லீம் ராஜபுத்திரர்களும் "ஷேக்" என அழைக்கப்படுகிறனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia