பண்ணையாரும் பத்மினியும்
பண்ணையாரும் பத்மினியும், என்பது 2014 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இதனை அருண்குமார் இயக்கினார். இது ஏற்கனவே குறும்படமாக வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயனாக நடித்தார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். கதைச் சுருக்கம்பண்ணையார் ஜெயப்ரகாசின் நண்பர் ஊருக்குப்போகும்போது அவரிடம் தனது பத்மினி மகிழுந்தை கொடுத்துவிட்டுச் செல்கிறார். பண்ணையாருக்கு மகிழுந்து (கார்) ஓட்ட தெரியாததால் உழவு இயந்திரத்தை ஓட்டும் விஜயசேதுபதி மகிழுந்துக்கு ஓட்டுநராக வருகிறார். பத்மினி மேல் பண்ணையாருக்கும், அவர் மனைவிக்கும், ஓட்டுநர் விஜய் சேதுபதிக்கும் பாசம் கூடிக்கொண்டே போகிறது. திருமணநாளில் மனைவியை மகிழுந்தில் வைத்து அழைத்துச் செல்லவேண்டும் என்ற பண்ணையாரின் ஆசை. ஆனால் அந்நாளில் பண்ணையார் மகிழுந்தை ஓட்டவேண்டும் என்பது மனைவியின் விருப்பம். பண்ணையார் மகிழுந்து ஓட்டக்கற்றுக் கொண்டால் தான் பத்மினி என்ற மகிழுந்தை பிரிய நேரிடும் என விஜய் சேதுபதி அஞ்சுகிறார். பண்ணையார் மகிழுந்து ஓட்டக் கற்றுக்கொண்டாரா, தன் திருமணநாளில் மனைவியை மகிழுந்தில் வைத்து பண்ணையார் அழைத்துச் சென்றாரா, பத்மினியை விட்டு விஜய் சேதுபதி பிரிய நேர்ந்ததா, பத்மினி இவர்களோடு இருந்ததா என்பதை இயக்குநர் சொல்லியுள்ளார். நடிகர்கள்
குணச்சித்திர தோற்றம்ஒலிப்பதிவுஇந்தத் திரைப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் அமைத்திருந்தார். கவிஞர் வாலி இவ் திரைப்படத்துக்கு பாடல் எழுதினார். இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசுறேன் பேசுறேன் என்ற பாடல் ஒன்றை பாடி உள்ளார்.
விருதுகள்
குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia