எசு. யு. அருண்குமார்
எஸ். யு. அருண்குமார் தமிழ் திரைப்படத் துறையில் பணிபுரியும் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். இவர் தமிழ்நாட்டின் மதுரை அருகே உள்ள பரவாயைச் சேர்ந்தவர். [2] பன்னையாரும் பத்மினியும் (2014), சேதுபதி (2016), சிந்துபாத் (2019), சித்தா (2023) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கைஅருண் குமார் திருமணம் மதுரையில் 2 பிப்ரவரி 2025 அன்று நடைபெற்றது.[3] திரைப்பட வாழ்க்கைஅருண்குமார் திரைப்பட ஆர்வத்தில் சில குறும்படங்களை உருவாக்கினார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் (குறும்படங்களுக்கான தொலைக்காட்சி போட்டி) இரண்டாவது பருவத்தில் பங்கேற்றார்.[4] விஜய் சேதுபதி நடித்த பன்னையாரும் பத்மினியும் (2014) படத்தின் மூலம் அருண்குமார் இயக்குநராக அறிமுகமானார்.[5] இந்த படம் முதலில் ஒரு குறும்படமாக இருந்தது. பின்னர் ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டது. முக்கிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு வேறுப்பட்ட கதையுடன் வெளியானது.[6] இது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்று பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டாலும், இது வசூலில் வெற்றி பெறவில்லை. பின்னர் விஜய் சேதுபதி சேதுபதி (2016) படத்தில் இணைந்து பணியாற்றிய அருண்குமார், இருவரும் சேர்ந்து வணிக ரீதியான வெற்றியை கொடுக்க விரும்பினர்.[7][8] இப்படம் வணிக ரீதியாக வெற்றிப்பெற்றது. இந்தப் படம் தெலுங்கில் ஜெயதேவ் என்ற பெயரில் அறிமுக நடிகர் காந்தா ரவியுடன் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[9] அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் சிந்துபாத் (2019) திரைப்படத்தில் கைகோர்த்தார்.[10] விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவை சிந்துபாத் படத்தில் அருண்குமார் நடிக்க வைத்தார்.[11] படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியா, கம்போடியா மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டன.[12] 2020 ஆம் ஆண்டில் தென்காசி சங்கிலி பறிப்பு நிகழ்வுகளைப் பற்றி இமைக்கா விழிகள் என்ற ஆவணப்படத்தை உருவாக்கினார்.[13] அதன் எழுத்தாளர், இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் இருந்தார். சித்தார்த் கதாநாயகனாக நடித்த சித்தா (2023) படத்தை இயக்கினார். இது செப்டம்பர் 28, 2023 அன்று வெளியாகி விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.[14][15] கடைசியாக இவர் இயக்கி வெளியான திரைப்படம், விக்ரம் நடித்த வீர தீர சூரன் பகுதி 2 ஆகும்.[16] திரைப்படங்கள்
முழுநீளப்படங்கள்Feature films
குறும்படங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia