பாமணி விரைவு தொடருந்து
பாமணி விரைவு தொடருந்து (Pamini Express), இந்திய ரெயில்வே துறையினரால் ஆந்திரா மாநிலம் திருப்பதி மற்றும் தமிழ்நாடு மாநில மன்னார்குடி நிலையம் ஆகிய இரு நிலையங்களுக்கு இடையே 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இயக்கப்படும் விரைவு தொடருந்தாகும். 18 நிறுத்தங்களைக் கொண்ட இந்த தொடருந்து, 17407 மற்றும் 17408 என்ற எண்களின் கீழ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த தொடருந்து இருநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தொடருந்தாகும். பெயர்க்காரணம்தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டம் மூனாற்றுத் தலைப்பு வெண்ணாற்றில் இருந்து பிரிந்து நீடாமங்கலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை வழியாக பாய்ந்து சென்று முத்துப்பேட்டை கடலில் கலக்கும் ஆறு பாமணி ஆகும். இதே வழிப்பாதையில் இயக்கப்படுவதால் இந்த தொடருந்து இப்பெயர் பெற்றது. [1] பயணத்திட்டம்பாமணி விரைவு தொடருந்து கீழ்க்கண்ட வழிமுறையில் இயக்கப்பட்டு வருகிறது.
வழித்தடங்கள்
பயணப் பெட்டிகளின் வடிவமைப்புஉட்காரும் வசதி படைத்த இரண்டாம் வகுப்பு முன்பதிவு வசதி கொண்ட ஏழு பெட்டிகள்(D என்ற ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது), உட்காரும் வசதி படைத்த முன்பதிவு வசதி கொண்ட குளிர்சாதன பெட்டி ஒன்று(C1 என்ற ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது), முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகள் ஐந்து, இரண்டாம் வகுப்பு சரக்கு பெட்டிகள் மற்றும் இரண்டு சிறப்பு பெட்டிகள் என மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
வண்டி எண் 17407இந்த தொடருந்து வண்டியானது திருப்பதி தொடருந்து நிலையத்திலிருந்து செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரத்திற்கு மூன்று முறை காலை 10.40 மணிக்கு இயக்கப்பட்டு பக்கலா சந்திப்பு, சித்தூர்,காட்பாடி சந்திப்பு, வேலூர் கண்டோன்மெண்ட், ஆரணி சாலை, போளூர், திருவண்ணாமலை , திருக்கோவிலூர், விழுப்புரம் சந்திப்பு , கடலூர் துறைமுகம் சந்திப்பு,சிதம்பரம் சந்திப்பு, சீர்காழி சந்திப்பு, வைத்திஸ்வரன் கோவில், மயிலாடுதுறை சந்திப்பு, பேராளம், திருவாரூர் சந்திப்பு, நீடாமங்கலம் சந்திப்பு என 17 நிறுத்தங்களில் மணிக்கு 44 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 10 மணி 30 நிமிடங்களில் மன்னார்குடி தொடருந்து நிலையத்தை இரவு 9.10 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 463 கிலோ மீட்டர் ஆகும். உட்காரும் வசதி மட்டுமே கொண்ட இந்த இந்த நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்மேற்கு ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[2] வண்டி எண் 17408இந்த தொடருந்து வண்டியானது மன்னார்குடி தொடருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை, புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை என வாரம் மூன்று முறை காலை 05.45 மணிக்கு இயக்கப்பட்டு 17 நிறுத்தங்களில் மணிக்கு 44 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 10 மணி 35 நிமிடங்களில் திருப்பதி தொடருந்து நிலையத்தை மாலை 16.20 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 463 கிலோ மீட்டர் ஆகும். உட்காரும் வசதி மட்டுமே கொண்ட இந்த நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்மேற்கு ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia