அரசு விக்டோரியா கல்லூரி (ஆங்கிலம்-Government Victoria College) 1887 ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் உருவாக்கப் பட்டது. இது கேரளத்தின் ஆறு மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள, மலபார் பகுதியில் உள்ள மிகப் பழைமையான கல்லூரி ஆகும்.
விக்டோரியா அரசினர் கல்லூரிகல்லூரியின் அடிக்கல்
தோற்றமும், வளர்ச்சியும்
இது 1866 ஆம் ஆண்டு, தரப்பள்ளியாக(rate school) உருவாக்கப்பட்டது. பின் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு, 1888ஆம் ஆண்டு இரண்டாம் நிலைகல்லூரியாக உயர்த்தப்பட்டு, தமிழகத்தின் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. மொழிவாரியான மாநிலங்கள் இந்தியாவில் உருவானதால், 1957ஆம் ஆண்டு, இக்கல்லூரி கேரளப் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது. தற்பொழுது இக்கல்லூரி கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி
இக்கல்லூரியின் குறிக்கோளுரை, இலத்தீனில் 'Labunter et imputatur' உள்ளது.
இதன் ஆங்கிலப்பெயர்ப்பு, the moments slip away and are laid to your accountஆகும்.
தமிழில், 'உங்கள் வாழ்நாளில் கண்டறியாத நேரங்கள் குறிக்கப்படுகின்றன' என்று பொருளாகிறது.
இக்கல்லூரியில் கலை,வணிகம், அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. குறிப்பாக விலங்கியல் துறையில், முனைவர் பட்டத்திற்கான ஆய்வு வசதி உள்ளது.