பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில்
அகோபில வரதராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் பாலசமுத்திரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோயிலானது, பழனி முருகன் கோயிலின் ஓர் உபகோயிலாகும்.[3] பழனியிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் அகோபில வரதராஜ பெருமாள் ஆவார். தாயார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆவர். இக்கோயிலில் கருடாழ்வார், வீர ஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.[4] மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை நினைவூட்டக்கூடிய பழங்கால தசாவதார சிலைகள், பெருந்தேவி தாயார் சன்னதியில் நிறுவப்பட்டுள்ளன.[5] கடல் மட்டத்திலிருந்து சுமார் 378 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°25′05″N 77°29′54″E / 10.4180°N 77.4983°E ஆகும். ஆவணி பிரம்மோற்சவம்,[6] சித்ரா பௌர்ணமி, சித்திரை மாதப் பிறப்பு, ஆடிப் பூரம், ஆடி சுவாதி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி,[7] பங்குனி உத்திர திருக்கல்யாணம் ஆகிய திருவிழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia